கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக அமைச்சர் ரோஜாவை ஒரே நேரத்தில் 3,000 பேர் போட்டோ எடுத்தனர்.
ஆந்திர மாநில விளையாட்டு மட்டும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் நடிகை ரோஜா. இவர், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறுவதற்காக 3,000 பேர் போட்டோ எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, தெலங்கானாவை சேர்ந்த 3,000 போட்டோகிராபர்கள் நேற்று விஜயவாடாவில் உள்ள தனியார் மண்டபத்தில் குவிந்தனர். இதையடுத்து, மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு ரோஜா வந்தார். அப்போது ‘ஒன் கிளிக் ஆன் சேம் டைம்’ என்ற முறையில் ஒரே நேரத்தில் 3,000 போட்டோகிராபர்கள் அமைச்சர் ரோஜாவை படம் பிடித்தனர்.
உலகத்தில் இதுவரை யாரும் பெண் அமைச்சர் ஒருவரை ஒரே நேரத்தில் 3,000 போட்டோகிராபர்கள் போட்டோ எடுத்தது கிடையாது. இதையடுத்து அவர், வொண்டர் புக் ஆப் ரெக்கார்ட் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். பின் நடிகையும் அமைச்சருமான ரோஜாவுக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
-பா.ஈ.பரசுராமன்.




