ஒரு சூரியன், ஒரு சந்திரன் என்பது போல, ஒரு எம்ஜிஆர், ஒரு ஜெயலலிதா, ஒரு கலைஞர், ஒரு கேப்டன் தான். அவர்களின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. அதேபோல் ஒரு பிரேமலதா விஜயகாந்த் தான். என்னுடைய இடத்தையும் யாரும் நிரப்ப முடியாது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் தூய்மைப் பணியை தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டதை கண்டித்தும், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் தொடர்ந்து 11ஆவது நாளாக ரிப்பன் மாளிகை வளாக நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை பிரேமலதா விஜயகாந்த் சந்தித்துப் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த நகரம் சுத்தமாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு காரணம் மக்கள்நலப் பணியாளர்கள் தான். மழை பெய்யும் போது கூட அவர்கள் போராட்டத்தை தொடர்கிறார்கள். மலை குப்பை எதுவுமே அவர்களுக்கு தெரியாது, அதிலேயே வாழ்கிறார்கள். அரசாங்கம் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றிய அவர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். மக்கள் நலப் பணியாளர்களின் கோரிக்கைக்கு நாங்கள் துணை நிற்போம். முதல்வர் எண் இதுவரை வந்து சந்திக்கவில்லை என்ற கேள்வி ஆளும் தரப்பில் தான் கேட்க வேண்டும். அமைச்சர்கள் வந்து பேசுகிறார்கள் தவிர அவர்களை கோரிக்கை நிறைவேற்றவில்லை. மனிதாபிமானத்தின் அடிப்படையில் பிரச்சனைக்கு அரசு முடிவை ஏற்படுத்த வேண்டும்.

திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தது உண்மைதான் என்று அனைவரும் சொல்கிறார்கள். போராடுபவர்களின் கோரிக்கை நியாயமானது தான். ஆளுமை மிக்க பெண் அரசியல்வாதி என்ற விருது அளித்தார்கள். அப்போது பேசிய சுதீஷ், பொதுச் செயலாளராக அம்மையார் ஜெயலலிதா சிங்க பெண்ணாக இருந்தார். அதற்குப் பிறகு எனது சகோதரி இன்றைக்கு ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக முழுவதுமாக அரசியலில் ஈடுபட்டு சிங்க பெண்ணாக இருக்கிறார் என்று கூறினார்.
தொண்டர்கள் யாரோ என்னையும் ஜெயலலிதாவையும் இணைத்து ஒரு புகைப்படத்தில் பகிர்ந்தார்கள். அதை சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். ஒரு சூரியன், ஒரு சந்திரன் என்பது போல, ஒரு எம்ஜிஆர், ஒரு ஜெயலலிதா, ஒரு கலைஞர், ஒரு கேப்டன் தான். அவர்களின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. அதேபோல் ஒரு பிரேமலதா விஜயகாந்த் தான். என்னுடைய இடத்தையும் யாரும் நிரப்ப முடியாது. கேப்டன் இல்லாதபோதும் அவர் எனக்கு கொடுத்த, பயிற்சி, நம்பிக்கை, வீரியம் ஆகிய உறுதியுடன் இன்றைக்கு கேப்டன் வழியில் நானும் எங்கள் கழக தொண்டர்களும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எனவே இங்கு ஒருத்தருக்கு பதில் யாரும் வர முடியாது.
ஜெயலலிதா ஒரு இரும்பு பெண்மணி. முதல்வராக இருந்து பல சாதனைகள் செய்தவர். எவ்வளவோ சவால்களை சந்தித்தவர். இரும்பு பெண்மணி ஆக இருந்த ஜெயலலிதாவால் எனது அரசியல் ரோல் மாடல் என்று ஏற்கனவே நான் தெரிவித்து இருக்கிறேன். கேப்டன் எம்ஜிஆரை தனது மானசீக குருவாகக் கொண்டவர். இன்றளவும் தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆரின் சிலையும் புகைப்படமும் உள்ளது. அரசியலில் எங்களுக்கு மானசீக குரு கேப்டன் தான் என்று சொல்பவர்கள் கேப்டன் படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு தேமுதிக அனுமதி வழங்கும். சுவரொட்டிகளிலும் சமூக வலைதளங்களில் மட்டுமே கேப்டன் படத்தைப் பயன்படுத்துவதை நாங்கள் பயன்படுத்தக் கூடாது என்று கூறுகிறோம் எனத் தெரிவித்தார்.




