Tuesday, December 16, 2025
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

என்னுடைய இடத்தையும் யாரும் நிரப்ப முடியாது – பிரேமலதா

August 11, 2025

ஒரு சூரியன், ஒரு சந்திரன் என்பது போல, ஒரு எம்ஜிஆர், ஒரு ஜெயலலிதா, ஒரு கலைஞர், ஒரு கேப்டன் தான். அவர்களின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. அதேபோல் ஒரு பிரேமலதா விஜயகாந்த் தான். என்னுடைய இடத்தையும் யாரும் நிரப்ப முடியாது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் 5, 6 ஆகிய இரண்டு மண்டலங்களிலும் தூய்மைப் பணியை தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டதை கண்டித்தும், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் தொடர்ந்து 11ஆவது நாளாக ரிப்பன் மாளிகை வளாக நுழைவாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை பிரேமலதா விஜயகாந்த் சந்தித்துப் பேசினார்.

மாவீரனுடன் வாழ்ந்தேன் என்ற பெருமையே போதும் – பிரேமலதா

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தனித்துப் போட்டி… பிரேமலதா பேட்டி

தீபா, தீபக்கிற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை!

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்த நகரம் சுத்தமாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு காரணம் மக்கள்நலப் பணியாளர்கள் தான். மழை பெய்யும் போது கூட அவர்கள் போராட்டத்தை தொடர்கிறார்கள். மலை குப்பை எதுவுமே அவர்களுக்கு தெரியாது, அதிலேயே வாழ்கிறார்கள். அரசாங்கம் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றிய அவர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும். மக்கள் நலப் பணியாளர்களின் கோரிக்கைக்கு நாங்கள் துணை நிற்போம். முதல்வர் எண் இதுவரை வந்து சந்திக்கவில்லை என்ற கேள்வி ஆளும் தரப்பில் தான் கேட்க வேண்டும். அமைச்சர்கள் வந்து பேசுகிறார்கள் தவிர அவர்களை கோரிக்கை நிறைவேற்றவில்லை. மனிதாபிமானத்தின் அடிப்படையில் பிரச்சனைக்கு அரசு முடிவை ஏற்படுத்த வேண்டும்.

திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தது உண்மைதான் என்று அனைவரும் சொல்கிறார்கள். போராடுபவர்களின் கோரிக்கை நியாயமானது தான். ஆளுமை மிக்க பெண் அரசியல்வாதி என்ற விருது அளித்தார்கள். அப்போது பேசிய சுதீஷ், பொதுச் செயலாளராக அம்மையார் ஜெயலலிதா சிங்க பெண்ணாக இருந்தார். அதற்குப் பிறகு எனது சகோதரி இன்றைக்கு ஒரு கட்சியின் பொதுச்செயலாளராக முழுவதுமாக அரசியலில் ஈடுபட்டு சிங்க பெண்ணாக இருக்கிறார் என்று கூறினார்.

தொண்டர்கள் யாரோ என்னையும் ஜெயலலிதாவையும் இணைத்து ஒரு புகைப்படத்தில் பகிர்ந்தார்கள். அதை சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்தார். ஒரு சூரியன், ஒரு சந்திரன் என்பது போல, ஒரு எம்ஜிஆர், ஒரு ஜெயலலிதா, ஒரு கலைஞர், ஒரு கேப்டன் தான். அவர்களின் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. அதேபோல் ஒரு பிரேமலதா விஜயகாந்த் தான். என்னுடைய இடத்தையும் யாரும் நிரப்ப முடியாது. கேப்டன் இல்லாதபோதும் அவர் எனக்கு கொடுத்த, பயிற்சி, நம்பிக்கை, வீரியம் ஆகிய உறுதியுடன் இன்றைக்கு கேப்டன் வழியில் நானும் எங்கள் கழக தொண்டர்களும் பயணித்துக் கொண்டிருக்கிறோம். எனவே இங்கு ஒருத்தருக்கு பதில் யாரும் வர முடியாது.

ஜெயலலிதா ஒரு இரும்பு பெண்மணி. முதல்வராக இருந்து பல சாதனைகள் செய்தவர். எவ்வளவோ சவால்களை சந்தித்தவர். இரும்பு பெண்மணி ஆக இருந்த ஜெயலலிதாவால் எனது அரசியல் ரோல் மாடல் என்று ஏற்கனவே நான் தெரிவித்து இருக்கிறேன். கேப்டன் எம்ஜிஆரை தனது மானசீக குருவாகக் கொண்டவர். இன்றளவும் தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆரின் சிலையும் புகைப்படமும் உள்ளது. அரசியலில் எங்களுக்கு மானசீக குரு கேப்டன் தான் என்று சொல்பவர்கள் கேப்டன் படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு தேமுதிக அனுமதி வழங்கும். சுவரொட்டிகளிலும் சமூக வலைதளங்களில் மட்டுமே கேப்டன் படத்தைப் பயன்படுத்துவதை நாங்கள் பயன்படுத்தக் கூடாது என்று கூறுகிறோம் எனத் தெரிவித்தார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

ஆகஸ்ட் 15ல் கிராம சபைக் கூட்டம்

Next Post

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் நாளை தொடக்கம்!

Next Post

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் நாளை தொடக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025

தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!

November 20, 2025

மீண்டும் பரப்புரையைத் தொடங்கும் விஜய்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version