‘ஓரணியில் தமிழ்நாடு’ – தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் பயிற்சி முகாம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.
திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை பரப்புரையின் தொடக்கமாக, புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கான செயலியின் விவரங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் பயிற்சி அரங்கு இன்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடங்கி வைக்கிறார். மேலும், இந்த அணிச் செயலாளர் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாடு முழுவதும் உள்ள தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

இவர்கள் மூலம் ஒவ்வொரு தொகுதியிலும் வாக்குச்சாவடி வாரியாக உள்ள சமூக வலைத்தள உறுப்பினர்களுக்கு ஜூன் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, ஜூலை 1 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்ப்பு நிகழ்வு இந்த செயலி வாயிலாக மேற்கொள்ள இருக்கிறது.





