மஹாராஷ்டிர மாநிலத்தில் ஆளுநர் – முதல்வர் இடையே மோதல்.
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளிடையே பரவியுள்ள நிலையில் இந்தியாவில் கொரொனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது.
இந்த நோய்த் தொற்றைக் குறைக்க அரசு பல்வேறு பாதுக்காப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது 5வது கட்டமாக ஊரங்கில் சில தளர்வுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு.
மஹாராஷ்டிராவில் நாள்தோறும் கொரொனா தொற்றால் மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மஹாராஷ்டிராவில் வழிபாட்டுத் திறப்பது தொடர்பாக ஆளுநர்- முதலமைச்சர் இடையே மோதல் வெடித்துள்ளது.
குறிப்பாக பல்வேறு கட்டத்தளர்வுகள் அறிவித்து, மதுக்கடைகள் திறந்த பின் வழிபாட்டுத் தளங்களைத் திறக்காதது ஏன் என்று ஆளிநர் பிஎஸ் கோஷ்யாரி முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.
இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியபின் வழிபாட்டுத் தளங்கள் திறப்பது முடிவெடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.