கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள ஒரு பூங்காவில் ,1989 ஆம் ஆண்டில் சென்ட்ரோசரஸ் (Centrosaurus) என்ற கொம்புள்ள டைனோசரின் புதைபடிவங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். முதன்முதலில் அதை பார்த்தபோது அதன் கால்களில் இருந்த மோசமான அமைப்பை குணமடைந்த எலும்பு முறிவு என்று நினைத்தனர்.
ஆனால் தற்போது ஒரு புதிய பரிசோதனை வேறு மாதிரியான தகவல்களை தெரிவிக்கிறது. 7.6 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இந்த சென்ட்ரோசரஸ், வீரியம் மிக்க புற்றுநோயால் பாதிக்கப்பட்ட டைனோசரின் முதல் அறியப்பட்ட உதாரணம் என தெரியவந்துள்ளது. ஆஸ்டியோசர்கோமா(osteosarcoma) என்ற ஒரு வகை கேன்சரால் அது பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
அதன் கால் எலும்பில் ஒரு ஆப்பிளை விட பெரிய அளவிலான கட்டி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குறிப்பிட்ட சென்ட்ரோசரஸ் டைனோசர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, பலவீனமடைந்து, இறந்துள்ளது. இந்த குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பு சில டைனோசர்கள் எவ்வளவு பெரியதாகவோ அல்லது சக்திவாய்ந்ததாகவோ தோன்றினாலும், மனிதர்களைப் போல அல்லது மற்ற விலங்குகளை போலவே தான் அவையும் வாழ்ந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது.
பெரும்பாலான கேன்சர் கட்டிகள் மென்மையான பகுதிகளிலேயே ஏற்படுவதால் புதைபடிவமாக கிடைப்பது அரிது. எனவே புற்று நோய்க்கான ஆதாரம் குறைவாகவே இருந்தது. இவ்வளவு பழமையான கேன்சரால் பாதிக்கப்பட்ட டைனாசரின் ஆதாரம் கிடப்பது இதுவே முதல்முறை.