திரிபாதி அதிரடியில் அரைசதத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 168 ரன்கள் இலக்காக வழங்கியது கொல்கத்தா அணி
அபு தாபியில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா- சென்னை அணிகள் மோதியது.டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்ய, தொடக்க வீரர்களாக சுப்மன் கில், திரிபாதி களம் இறங்கினர்.ஆரம்பம் முதலே திரிபாதி அதிரடியை வெளிப்படுத்த,மறுமுனையில் கடந்த போட்டிகளில் நல்ல பார்மில் இருந்த கில் வெறும் 11 ரன்களில் சர்துல் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.அடுத்து வந்த ராணா(9 ரன்கள்,10 பந்துகள்) சாம் கர்ர்ன் வீசிய 9 வது ஓவரில் நடையைக்கட்ட,சிறப்பாக விளையாடிய திரிபாதி 30 பந்துகளில் 50 ரன்களை கடந்தார்.
இந்த முறை 4 வதாக உள்ளே வந்த நரேன் தன் பங்கிற்கு ஒரு பௌண்டரி,ஒரு சிக்ஸர் அடித்து கரண் சர்மா பந்தில் ஜடேஜாவின் அட்டகாசமான பில்டிங்கில் வெளியேற,13 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட்களை இழந்து 109 ரன்கள் பெற்று இருந்தது. சாம் கர்ர்ன் வீசிய 14 வது ஓவரில் மோர்கன் (7 ரன்கள்,10 பந்துகள்) விக்கெட் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.தொடர்ந்து அடித்து ஆடிய திரிபாதி அடுத்த ஓவர் போட்ட தீபக் சாகர் பந்தில் ஒரு பௌண்டரி,ஒரு சிக்ஸர் அடித்து அசத்த,மிகவும் பெரிதாக எதிர்பார்த்த ரசல் சர்துல் வீசிய 16 வது ஓவரில் வெறும் 2 ரன்களுடன் வெளியேறினார்.
சிறப்பாக ஆடிய திரிபாதி(81 ரன்கள்,51 பந்துகள்)பிராவோ போட்ட 17 வது ஓவரில் வாட்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.கம்மின்ஸ் இறங்கி பௌண்டரிகளை ஓட விட,கேப்டன் தினேஷ் கார்த்திக் 12 ரன்களில் சாம் கர்ர்ன் பந்தில் அவுட் ஆகி நடையை கட்டினார்.அடுத்து வந்த நாகர்கோட்டி மற்றும் மாவி டக் அவுட் ஆக,சக்கரவர்த்தி 1ரன்னில் ரன் அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 167 ரன்கள் எடுத்து சென்னை அணிக்கு 168 ரன்கள் இலக்காக வழங்கியது.