மும்பை அணிக்கு எதிரான போட்டியில், 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழப்பிற்கு, 162 ரன்களை எடுத்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக நிகிடி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தி அசத்த்தினார்.

இதையடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர் வாட்சன், 4 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டத்தின் முதல் ஓரிலேயே நடையை கட்டினார். மற்றொரு தொடக்க வீரரான முரளி விஜய், நடுவரின் தவறான முடிவால் 7 ரன்கள் எடுத்திருந்த போது எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார். இதனால் சென்னை அணி 2 ஓவர்கள் முடிவில் 6 ரன்களை எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து, 3 விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டூப்லெசி – ராயுடு ஜோடி பொறுப்புடன் ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். சீரான இடைவெளியில் சிக்சர் மற்றும் பவுண்டரிகளை விளாசிய ராயுடு, ஐபிஎல் தொடரில் தனது 17வது அரைசதத்தை நிறைவு செய்தார். இந்த ஜோடி 115 ரன்கள் சேர்த்த நிலையில், 71 ரன்கள் எடுத்திருந்த போது, ராகுல் சாஹர் ஓவரில் ராயுடு அவுட்டாகி வெளியேறினார்.
தொடர்ந்து வந்த ஜடேஜா 10 ரன்கள் மட்டும் எடுத்து, வந்த வேகத்தில் வெளியேறினார்.
இதையடுத்து, ரசிகர்கள் தோனியை எதிர்பாரத்த நிலையில் சாம் குர்ரன் களமிறங்கி 2 சிக்சர், ஒரு பவுண்டரி என அடுத்தடுத்து விளாசி 16 ரன்கள் குவித்து வெளியேறினார். இதற்கு மத்தியில் மறுபுறம் நிலைத்து ஆடிய டூப்லெசி, ஐபிஎல் தொடரில் 13வது அரைசதத்தை நிறைவு செய்தார். இதையடுத்து, 19.2 ஓவர்களில் சென்னை அணி 167 ரன்களை குவித்து, கடந்தாண்டு இறுதிப்போட்டியில் பெற்ற தோல்விக்கு சென்னை அணி மும்பையை பழி வாங்கியது.
இதனிடையே, ஒருவழியாக ரசிகர்கள் எதிர்பார்த்தபடி 6வது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் தோனி, ஒரு ரன் கூட எடுக்காமல் களத்தில் இருந்தார். 71 ரன்கள் குவித்த ராயுடு ஆட்டநாயகன் விருது பெற்றார்.




