காமன்வெல்த் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 22வது காமன்வெல்த் போட்டியில் முதல்முறையாக பெண்கள் டி20 கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதியது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 154 ரன்களை எடுத்தது. இந்திய அணி சார்பில் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அதிகபட்சமாக 52ரன்களையும்,ஷபாலி வர்மா 48 ரன்களை எடுத்தனர்.
155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 19வது ஓவரில் இலக்கை கடந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் ஆஸ்லீக் கார்னர் 52 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
-பா.ஈ.பரசுராமன்.




