ஒரு வருடத்திற்கும் மேலாக எந்த ஒரு போட்டி கிரிக்கெட்டிலும் பங்கேற்காத நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற எம்.எஸ் தோனி எடுத்த முடிவு பலருக்கும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. இருப்பினும், முன்னாள் இந்திய கேப்டன் டீம் இந்தியாவுடன் பிரிந்து செல்ல முடிவு செய்த விதம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. தோனி தனது முடிவை ஆகஸ்ட் 15 அன்று இரவு 7:29 மணிக்கு இன்ஸ்டாகிராமில் அறிவித்தார்.

முன்னாள் இந்திய கேப்டனுக்கு இணையம் முழுவதும் ரசிகர்கள் மட்டுமின்றி பல நாடுகளின் வீரர்களும் மரியாதை செலுத்தி வருகிறார்கள், அவர் தனது தலைமையின் கீழ் பல மறக்கமுடியாத வெற்றிகளுக்கு நாட்டை வழிநடத்தினார்.

அவர் இந்திய அணியில் இருந்து விடைபெறும் போட்டியை காண பல கோடி ரசிகர்கள் மற்றும் இன்றி பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் பி.சி.சி.ஐ. தோனிக்கு விடைபெறும் போட்டியை நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளது இதுகுறித்து தற்போது பி.சி.சி.ஐ இதில் ஆர்வமாக உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன, மேலும் இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) முடிந்தவுடன் இது குறித்து பிசிசிஐதிட்டமிடும் என தெரிவித்துள்ளது.

ஐபிஎல் 2020 முடிவடைந்த பின்னர் தோனிக்கு விடைபெறும் போட்டியை ஏற்பாடு செய்ய வாரியம் எதிர்பார்க்கிறது என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் சமீபத்தில் உறுதிப்படுத்தினார்,
ஐபிஎல் போட்டிகள்செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தப்பட உள்ளது. ஐபிஎல் 2020 இன் இறுதிப் போட்டி நவம்பர் 10 ஆம் தேதி நடைபெறும். அதன் பிறகு தோனியின் கடைசி ஆட்டத்தை இந்தியா ஜெர்சியில் வாரியம் ஏற்பாடு செய்யலாம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
தற்போது எந்த சர்வதேச தொடரும் இல்லை, ஒருவேளை ஐபிஎல் முடிந்த பிறகு என்ன செய்ய முடியும் என்று பார்ப்போம், ஏனெனில் தோனி தேசத்திற்காக நிறைய செய்திருக்கிறார். அவர் எல்லா மரியாதைக்கும் தகுதியானவர் நாங்கள் எப்போதும் அவருக்கு விடைபெறும் போட்டியை நடத்த விரும்புகிறோம், ஆனால் தோனி வேறு யாரும் அதைப் பற்றி யோசிக்காத வண்ணம் அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். “என்று பி.சி.சி.ஐயின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பி.சி.சி.ஐ அதிகாரி மேலும் கூறுகையில், வாரியம் தோனியிடம் இதுவரை அவரின்பிரியாவிடை போட்டி பற்றி அவரிடம் பேசவில்லை ஆனாலும்கூட தோனியின் உடன்பாட்டைப் பொருட்படுத்தாமல் அவர்கள் ஒரு வாழ்த்து விழாவை நிச்சயம் ஏற்பாடு செய்வார்கள். 39 வயதான அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு செய்த பங்களிப்புகளுக்காகவும், அவர் விட்டுச்சென்ற கிரிக்கெட் கலாச்சாரத்திற்கும் பி.சி.சி.ஐ. அவருக்கு பாராட்டு தெரிவிப்பது ஒரு மரியாதை என்று அந்த அதிகாரி கூறினார்.

எனவே, நிச்சயமாக நாங்கள் ஐபிஎல் போது அவருடன் பேசுவோம், அவர் ஒரு போட்டி விளையாட நினைக்கிறாரா அல்லதுஒரு தொடர் விளையாடுவதற்கு சம்மதமா என்ற தகவலை அவரிடமிருந்து பெற்று அவர் ஒப்புக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் அவருக்கு சரியான வாழ்த்து விழா எங்கள் சார்பில் இருக்கும். என்று தெரிவித்தார் .




