Tuesday, December 16, 2025
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

இந்தியாவின் தேசியகீதம் இயற்றிய, இரவீந்திரநாத் தாகூர் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 7,1941).

August 7, 2020
இரவீந்தரநாத் தாகூர் (Rabindranath Tagore) மே 7, 1861ல் தேவேந்திரநாத் தாகூர், சாரதா தேவி தம்பதியினருக்கு கொல்கத்தாவிலுள்ள ஜோராசாங்கோ மாளிகையில் பிறந்தார். இவரின் பெற்றோருக்கு பிறந்து உயிரோடு இருந்த பதின்மூன்று குழந்தைகளில் இவர் இளையவர் ஆவார். இவரின் தாய் இவர் குழந்தையாக இருந்தபோதே இறந்து விட்டார்.

இவரின் தந்தையும் வியாபார நோக்கில் அடிக்கடி வெளிநாடு சென்றதால் பெரும்பானமையான நேரங்களில் பணியாளர்களாலேயே வளர்க்கப்பட்டார். வங்காள மறுமலர்ச்சியில் இவரின் குடும்பம் பெரும் பங்காற்றியது. இவரின் குடும்பம் இலக்கிய நாளிதழ் வெளியீட்டு நிறுவனம் மற்றும் திரையரங்கம் போன்றவற்றை நடத்தி வந்தனர். அங்கு தொடர்ச்சியாக வங்காளம் மற்றும் நவீனத்துவ மரபார்ந்த பாடல்கள் பாடப்பட்டன. தாகூரின் தந்தை தொழில்முறை துருபாத் இசைக் கலைஞர்களை தங்களது இல்லத்திற்கு அழைத்து வந்து தங்களது குழந்தைகளுக்கு இந்திய இசைகளை கற்றுத்தந்தார்.

தாகூர் பள்ளியறைகளில் இருப்பதை விட பிரபுமனைகள் அல்லது தங்கள் குடும்பத்தினர் அதிகம் செல்லக்கூடிய போல்பூர் மற்றும் பானிஹாட்டிக்குச் செல்வதையே விரும்பினார். இவரின் சகோதரர் ஹேமேந்திரநாத் இவருக்கு கங்கை ஆற்றில் நீச்சல் கற்றுத் தருதல் அல்லது மலையேற்றம், சீருடற்பயிற்சிகள், ஜூடோ, குத்துச்சண்டை ஆகியவற்றை கற்றுக்கொடுத்தார். தாகூர், வரைதல், உடற்கூறியல், புவியியல், வரலாறு, இலக்கியம், கணிதம், சமஸ்கிருதம், ஆங்கிலம் போன்றவற்றையும் கற்றார். முறையான கல்வியில் இவருக்கு விருப்பம் இல்லை. இவர் பிரசிடென்சி கல்லூரியில் ஒருநாள் மட்டுமே கல்வி பயின்றார். உண்மையான கற்றல் என்பது சரியான விளக்கங்களை அளிப்பது ஆகாது, அது அறிவார்வத்தை ஏற்படுத்துவது என எண்ணினார்.

ஒரே காரில் பயணித்த மோடி மற்றும் புடின்!

12000 பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்

துணைக் குடியரசுத்தலைவர் புதுச்சேரி வருகை

இவர் மனம் வங்காள மொழியிலும், சமஸ்கிருத மொழியிலும் இலயித்து நின்றது. இவரது பதினோராவது வயதில் இவருக்கு பூணூல் சடங்கு செய்யப்பட்டது. பிப்ரவரி 14, 1873ல் இவரது தகப்பனாருடன் கொல்கத்தாவை விட்டுப் புறப்பட்டுப் பல மாதங்கள் இந்தியாவின் இதர மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இவரது தந்தையாரின் சாந்திநிகேதன் தோட்டத்துக்கும் சென்றனர். பின்னர் இமயமலைப் பகுதியான டால்கூசிக்குச் செல்வதற்கு முன்னர் அம்ரித்சாரிலும் இவர்கள் தங்கினர். அங்கே அவர் பலருடைய வரலாறுகளை கற்றதுடன், வானியல், அறிவியல், சமசுகிருதம் ஆகிய பாடங்களைப் படித்தார். காளிதாசரின் கவிதைகளையும் கற்றார். கவிதைகளில் ரவீந்திரநாத்தாகூர் அவர்களின் முதல் கவிதைப் புத்தகமான ‘கபி கஹினி’ (ஒரு கவிஞர் கதை) 1878ல் வெளியிடப்பட்டது. அதே ஆண்டில், தாகூர் அவர்கள் சட்டம் பயில்வதற்காக அவரது மூத்த சகோதரரான சத்யந்திரநாத்துடன் கடல்வழியாக இங்கிலாந்து சென்றார். ஆனால், ஷேக்ஸ்ப்பியர் மற்றும் பிறரது ஆக்கங்களை ஆராய்வதிலேயே ஆர்வம் காட்டியதால், பட்டம் பெறாமலேயே 1880ல் வங்கத்திற்குத் திரும்பிவிட்டார். பின்னர், ஒரு கவிஞராகவும், எழுத்தாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.

ரவீந்திரநாத் தாகூர் டிசம்பர் 9, 1883ல் மிருனாலி தேவி ராய்சௌத்ரி என்ற 10 வயதுப் பெண்ணை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் மூன்று மகள்கள்என ஐந்து குழந்தைகள் பிறந்தனர். ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், 1884ல், ‘கோரி-ஓ-கமல்’ (ஷார்ப் மற்றும் பிளாட்) என்ற கவிதைத் தொகுப்பை எழுதினார். மேலும், அவர் ‘ராஜா-ஓ-ராணி’  மற்றும் ‘விசர்ஜன்’ (தியாகம்) என்ற நாடகங்களையும் எழுதினார். 1890 ஆம் ஆண்டில், ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் தனது குடும்ப எஸ்டேட்டைப் பார்த்துக்கொள்ள சிலைதஹாவிற்கு சென்றார். 1893 முதல் 1900 வரை, தாகூர் அவர்கள் ஏழு கவிதைத் தொகுதிகளான ‘சொனார் தொரி’ (கோல்டன் படகு) மற்றும் ‘கனிகா’ போன்றவற்றை எழுதியுள்ளார். 1901ல், ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், பங்கதர்ஷன் என்ற இதழின் ஆசிரியரானார். பழைய இந்திய ஆசிரம முறை அடிப்படையில், அவர் சாந்திநிகேதனில் ‘போல்பூர் பிராமசார்யாஸ்ரமம்’ என்றொரு பள்ளியைத் துவங்கினார். 1902 ஆம் ஆண்டில், அவரது மனைவி மிருணாளினி இறந்தார். பின்னர், தாகூர் அவர்கள் இயற்றிய கவிதைகள் தொகுப்பான ‘ஸ்மரன்’ (மெமோரியம் அங்குலம்), என்ற படைப்பை அவரது மனைவிக்காக அர்ப்பணித்தார்.

1905ல் கர்சன் பிரபு வங்கத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க முடிவு செய்தார். இந்த முடிவை எதிர்த்து ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், கடுமையாகப் போராடினார். தாகூர் அவர்கள், பல தேசிய பாடல்களை எழுதி, பல்வேறு எதிர்ப்பு கூட்டங்களிலும் கலந்து கொண்டார். அவர் பிரிக்கப்படாத வங்காள அடிப்படை ஒற்றுமையை குறிக்கும் விதமாக ‘ராக்கிபந்தன் விழாவை’ வங்கத்தில் அறிமுகப்படுத்தினார். 1909ல் ரவீந்திரநாத் தாகூர் ‘கீதாஞ்சலியை’ எழுதத் தொடங்கினார். 1912 ஆம் ஆண்டில், இரண்டாவது முறையாக ஐரோப்பா சென்றார். இந்த லண்டன் பயணத்தின் போது, அவர் கீதாஞ்சலியில் இருந்து சில கவிதைகள் மற்றும் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார். இவர் லண்டனில் மதிக்கத்தக்க ஆங்கிலேய ஓவியரான வில்லியம் என்பவரை சந்தித்தார். அவரது கவிதைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ரோத்தென்ஸ்டீன், அவரது கவிதைகளைப் பிரதிகள் எடுத்து,  ஈட்ஸ் மற்றும் பிற ஆங்கிலக் கவிஞர்களுக்கும் கொடுத்தார். ஈட்ஸ் அவர்களும் பெரிதும் ஈர்க்கப்பட்டார். 

செப்டம்பர் 1912ல், லண்டனில் உள்ள இந்திய சமூகத்தின் ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பில் கீதாஞ்சலி வெளியிடப்பட்ட போது, தாகூர் அதற்கு முன்னுரை எழுதினார். 1913 ஆம் ஆண்டில் ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலிக்கு, இலக்கியத்துக்கான ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும். 1915 ஆம் ஆண்டில், தாகூர் அவர்களுக்கு, ஆங்கிலேய ஜார்ஜ் மன்னர், ‘சர்’ என்னும் வீரப்பட்டம் வழங்கினார். 1919ல் நடந்த ஜாலியன்வாலா பாக் படுகொலையைத் தொடர்ந்து, தாகூர் அவர்கள் ஆங்கிலேய ஜார்ஜ் மன்னர் அவர்கள் வழங்கிய ‘சர்’ என்னும் வீரப்பட்டத்தைத் துறந்தார். அவர் காந்திஜியின் ஒரு ஆதரவாளராக இருந்தாலும், அரசியலில் இருந்து விலகியே இருந்தார். அவர் கொள்கை என்ற நோக்கில் இருந்து தேசியவாதம் மற்றும் இராணுவவாதத்தை எதிர்த்து, அதற்கு பதிலாக ஆன்மீக மதிப்புகள் மற்றும் பண்பாடு, பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மைகள் கொண்ட ஒரு புதிய உலக கலாச்சாரத்தை உருவாக்க எண்ணினார். அவரது கருத்துக்களுக்கு ஒரு கருத்தியல் ஆதரவு பெறாதாதன் காரணமாக, அவருடைய சிந்தனைகளில் இருந்து ஓய்வு பெற்று ஒதுங்கியே இருந்தார். 

1916 முதல் 1934 வரை, அவர் பெருமளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். 1921ல், ரவீந்திரநாத் தாகூர் அவர்கள், விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார். அவர் தனது புத்தகங்களுக்காகக் கிடைத்த நோபல் பரிசின் மூலமாகக் கிடைத்த உரிமைத்தொகை அனைத்தையும் இந்த பல்கலைக்கழகத்திற்காக கொடுத்தார். தாகூர் அவர்கள், ஒரு படைப்பாக்க மேதையாக மட்டுமல்லாமல், மேற்கத்திய கலாச்சாரத்தையும், குறிப்பாக மேற்கத்திய கவிதைகள் மற்றும் அறிவியலில் மிகவும் அறிவுடையவராகவும் திகழ்ந்தார். தற்கால நவீன நியூட்டனின் இயற்பியலில் தாகூர் அவர்களுக்கு ஆழ்ந்த சிந்தனை இருந்ததால், புதிதாக வளர்ந்து வரும்குவாண்டம் மெக்கானிக்ஸின் கொள்கைகள் மற்றும் குழப்பங்களின் பேரில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் 1930ல் நடந்த ஒரு விவாதத்தில், அவரால் தனது கருத்துகளை முன் வைக்க முடிந்தது. அவரது சமகாலத்தவர்களான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஹெச்.ஜி.வெல்ஸ் போன்றோருடன் நடந்த கூட்டங்கள் மற்றும் நாடா பதிவு உரையாடல்கள் மூலமாக அவரது திறமைகளை சங்கிரகிக்க முடிந்தது. 1940ல், சாந்தி நிகேதனிலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு சிறப்பு விழா ஏற்பாடு செய்து, ரவீந்திரநாத் தாகூர் அவர்களுக்கு ‘இலக்கிய முனைவர் பட்டம்’ வழங்கப்பட்டது.

19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் இவர் வங்காள இலக்கியம் மற்றும் இசை வடிவத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். மேலும் இந்தியக் கலைகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தார். தாகூரின் படைப்புகள் ஆன்மீகததை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. இருந்த போதிலும் இவரின் படைப்புகளில் இருந்த நேர்த்தியான உரைநடையும், கவிதையின் மாயத் தன்மையும் வங்காளத்திற்கு மட்டுமல்லாது அனைத்துத் தரப்பிற்கும் பொருந்தக் கூடியதாக இருந்தது. சில நேரங்களில் இவர் வங்காளக் கவி எனவும் அறியப்படுகிறார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவரது நூல்களில் சிலவற்றை த. நா. குமாரசாமி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

இரவீந்திரநாத் தாகூர் அவர்கள் ஒரு கவிஞர், பாடகர், கதை மற்றும் நாவல் படைப்பாளர், ஓவியர், மாபெரும் எழுத்தாளர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசைப் பாடல்கள், அவற்றுக்கு ஏற்ற மெட்டுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், சுமார் இருபது நாடகங்கள், எட்டு நாவல்கள், எட்டுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்பு என பலவற்றை எழுதியவர். காந்திஜியை மகாத்மா என்று முதன் முதலில் அழைத்தவரும் காந்திஜியால் குருதேவ் என அழைக்கப்பட்டவரும் இவரே. இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்ற இரவீந்திரநாத் தாகூர் ஆகஸ்ட் 7, 1941ல் தனது 80வது அகவையில், கல்கத்தாவிலுள்ள தனது மூதாதையர் வீட்டில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே….

Next Post

எச்சில் துப்பி பெண் மருத்துவரை மிரட்டிய கொரோனா நோயாளிகள்..4 பேர் கைது

Next Post

எச்சில் துப்பி பெண் மருத்துவரை மிரட்டிய கொரோனா நோயாளிகள்..4 பேர் கைது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025

தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!

November 20, 2025

மீண்டும் பரப்புரையைத் தொடங்கும் விஜய்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version