செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள கிளாம்பாக்கம் செல்லியம்மன் நகர், காந்தி தெருவை சேர்ந்த 43 வயதான பாலமுருகன் ,இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார்.
குடிப்பழக்கம் உள்ள பாலமுருகன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் இருப்பவர்களிடம் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டு இருந்தார் நேற்றுமுன்தினம் இதே போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பாலமுருகன் வீட்டில் உள்ளவர்களிடம் மீண்டும் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வீட்டில் உள்ள படுக்கையறையில் உள் தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார்.வீட்டில் இருப்பவர்களும் அவர் அமைதியாக உறங்குகிறார் என நினைத்து உறங்கிவிட்டனர், ஆனால் நீண்ட நேரமாக அவர் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது பாலமுருகன் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் பாலமுருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.