மரபணு ஆய்வகத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரஸை கண்டறியும் ஆய்வகத்தை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த நிலையில், .4 கோடி ரூபாய் செலவில் சென்னையில் மரபணு ஆய்வகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஆய்வு கருவிகளும் வழங்கப்பட்டு பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து இந்த மரபணு ஆய்வகத்தை மக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் இன்று திறந்து வைக்க உள்ளார். இந்த ஆய்வகம் மூலம் டெல்டா, டெல்டா ப்ளஸ் வைரஸ் வகைகளை விரைவில் கண்டறிய முடியும். பெங்களூருவில் பயிற்சி பெற்ற 5 வல்லுநர்கள் சென்னை ஆய்வகத்தில் வைரஸ் மாதிரிகளை சோதனை செய்யவுள்ளனர்.