கொரோனா- இந்த ஒற்றை வார்த்தையை கண்டு உலகமே நடுங்கி வருகிறது. ஜனவரி மாத இறுதியில் இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடித்தனர்.
![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2020/07/WhatsApp-Image-2020-07-24-at-16.44.52-1-1024x512.jpeg?resize=1024%2C512&ssl=1)
அப்போது, இந்த நோயெல்லாம் வெளிநாட்டினரை தான் அதிகம் பாதிக்கும். நமக்கெல்லாம் ஒன்றும் ஆகாது என கெத்தாக அலைந்தோம். ஆனால் இன்று நிலைமை தலைகீழ்.
நாம் வாங்கும் காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை நன்கு கழுவி உலர்த்த வேண்டும். அப்படி செய்வதின் மூலம் நாம் வீட்டு தேவைக்காக வாங்கும் காய்கறி மற்றும் பழங்களில் உள்ள கிருமிகள் அழியும்.
காய்கறிகளை கழுவுகிறேன் என்ற பெயரில் பயன்படுத்தவே யோசிக்கும் அளவுக்கு செய்து விடுகிறோம். ஆனால் வித்தியாசமான முறையில் ஒருவர் காய்கறிகளை சுத்தம் செய்து வருவது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.