50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு டயாலிசிஸ் சிகிச்சை மிக முக்கியமான சிகிச்சையாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனை மற்றும் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை உள்ளது. இந்நிலையில், முதல் முறையாக, கிராமங்களில் உள்ள 50 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தேர்வு செய்து, அந்த பகுதியில் உள்ள தேவைப்படும் நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிக்சை அளிப்பதற்கான வசதிகள் தனியார் / தன்னார்வலர்கள் பங்களிப்புடன் ஏற்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது.

இதனைச் செயல்படுத்தும் வகையில் 50 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார மையங்களில் டயாலிசிஸ் மையங்களை நிறுவ அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் தனியார் பங்களிப்பு முறையில் இது நிறுவப்பட உள்ளது.




