Wednesday, December 17, 2025
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home தமிழ்நாடு

ஆதரவற்ற முதியவருக்கு இறுதிச்சடங்கு செய்த முன்னாள் எம்.எல்.ஏ.

October 17, 2020
மயிலாடுதுறையில் ஆதரவற்று இறந்த முதியவருக்கு, சமூக ஆர்வலர்கள் மற்றும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெக வீரபாண்டியன் இணைந்து இறுதிச் சடங்குகளைச் செய்து, நல்லடக்கம் செய்துள்ளனர்.
Jega Veerapandiyan

மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் கடந்த 5-ஆம் தேதியன்று மாலை 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் அடிபட்ட நிலையில் மயங்கிக் கிடந்தார். முதியவரைக் குறித்துத் தகவல் கிடைத்ததும், சமூக ஆர்வலர்கள் அப்பர் சுந்தரம், கிங் பைசல், ஜோதிராஜன் உள்ளிட்டோர் அங்குச் சென்று, தி.மு.க.வைச் சேர்ந்த மயிலாடுதுறை முன்னாள் சட்டபேரவை உறுப்பினர் ஜெக வீரபாண்டியன் ஆலோசனையின்படி, முதியவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சேர்த்து அனைத்து உதவிகளையும் செய்து வந்ததுடன், அவரது உறவினர்களை தேடும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தார்கள். அதன் வாயிலாக, முதியவரின் பெயர் சங்கர் ராவ் என்பதும், மேட்டூர் கெமிக்கல் காலனியில் வசிப்பவர் என்றும் தெரிய வந்தது. மேலும், அவருக்கு மேட்டூரில் உறவினர்கள் யாரும் இல்லையென்றாலும், முதியவருக்கு புனேவில் ஒரு சகோதரி இருக்கிறார் என்ற தகவலும் தெரியவந்தது.

கருணாநிதி சிலை மீது தார் ஊற்றிய மர்மநபர்களால் பரபரப்பு

வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது!

சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் – தவெக தலைவர் விஜய்

இதையடுத்து, முதியவரின் சகோதரியை தொடர்பு கொண்டபோது, அவருக்கும் எங்களுக்கும் தற்போது எந்தவித தொடர்பும் இல்லை எனவும், அவரை முற்றிலும் கைவிட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, முதியவருக்கு வேண்டிய அனைத்துத் தேவைகளையும் சமூக ஆர்வலர்களே செய்து கொடுத்து பராமரித்து வந்த நிலையில், நேற்று மாலை முதியவர் உயிரிழந்தார்.

இதனையடுத்து, முதியவரின் உடலைப் பெற்றுக் கொண்டு, அவருக்குச் செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்து, சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று, அங்குச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை ஜெக வீரபாண்டியன் முன்னின்று செய்தார். அங்கிருந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் காவல்துறையினரும் இணைந்து செய்ய வேண்டிய மற்ற இறுதிச் சடங்குகளையும் முறைப்படி செய்து, முதியவரை அடக்கம் செய்தனர்.

இதுக்குறித்து அங்குள்ளவர்கள் கூறும்போது, “வயதான காலத்தில் முதியவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றுவது, கண்டும் காணாமல் இருப்பது, உணவில்லாமல் தவிக்க விடுவது, அடிப்படை தேவைகளை செய்யாமல் இருப்பது போன்ற மனிதநேயமற்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் எனவும், பராமரிக்க முடியவில்லை என்றால், அருகில் உள்ள முதியோர் இல்லங்களிலாவது பெரியவர்களை ஒப்படைக்க வேண்டும்” என்றும் மனித நேயத்துடன் உடலை அடக்கம் செய்தவர்கள் கேட்டுக் கொண்டனர்.

உறவினர்கள் இருந்தும் அநாதையாக இறந்த முதியவரின் உடலை முறைப்படி அடக்கம் செய்த சமூக ஆர்வலர்கள், மயிலாடுதுறை காவல்துறை மற்றும் ஜெக வீரபாண்டியன் ஆகியோரின் மனித நேயத்தை பாராட்டி, பொதுமக்கள் பலரும் நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

அரசுப் பள்ளி மாணவர்களின் இட ஒதுக்கீட்டில் எந்த குளறுபடியும் இல்லை” – அமைச்சர் விஜயபாஸ்கர்

Next Post

கொரோனா பாதிப்பால் மனைவி பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த பிரபல பாடகர்

Next Post

கொரோனா பாதிப்பால் மனைவி பிறந்தநாள் கொண்டாட்டத்தை ரத்து செய்த பிரபல பாடகர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025

புதிய உதயம்; திராவிட வெற்றிக் கழகம்!

November 20, 2025

தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!

November 20, 2025

மீண்டும் பரப்புரையைத் தொடங்கும் விஜய்!

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version