தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா, ஒமைக்ரான், குரங்கம்மையை தொடர்ந்து இந்தியாவில் தக்காளி காய்ச்சல் 82 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொல்லத்தில் 5வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த நோய் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:தக்காளி காய்ச்சலை கட்டுப்படுத்த கேரள மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 27 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. 18 வயதை கடந்தவர்கள் 96.99% பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தியுள்ளனர் என்றார்.
இன்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.




