![](https://i0.wp.com/seithialai.com/wp-content/uploads/2023/01/1073825-chennai-08.webp?resize=750%2C450&ssl=1)
தமிழ்நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐதராபாத்தை சேர்ந்த நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சோதனை நடைபெற்று வரும் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் முறையான கணக்குகள் மற்றும் வரி ஏய்ப்பு சந்தேகங்களின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.