மறைந்த பேராசிரியர் அன்பழகன் 98வது பிறந்தநாள் விழாவில் மு.க. ஸ்டாலின் மரியாதை செய்தார்.
சென்னை:
திமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் க.அன்பழகனின் 98வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை, சென்னை, கீழ்பாக்கம் கார்டனில் உள்ள பேராசிரியரின் இல்லத்தில் உள்ள அவரது உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார்.
இந்நிகழ்வில், சென்னை, அயனாவரத்தில் உள்ள டபிள்யூ.பி.சௌந்தராஜன் மேல்நிலைப் பள்ளியில், 100 கல்லூரி மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார். மு.க ஸ்டாலின். அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., மாவட்ட செயலாளர்கள் பொறுப்பாளர்கள் திமுக தொண்டர்கள் கலந்துக்கொண்டனர்.
read more – ஆறு மாதங்களில் ஓய்வு பெறும் அதிகாரிகளுக்கு தேர்தல் பணி வழங்க வேண்டாம் – இந்திய தேர்தல் ஆணையம்
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொண்ட கொள்கை ஏற்றுக்கொண்ட தலைமை இயக்கத்தில் உறுதியென இறுதி மூச்சு வரை இயங்கிய நம் இனமானப் பேராசிரியரின் 98 வது பிறந்த நாளில் அவரின் அரும்பணிகளை போற்றுவோம். இயக்கம் மக்களுக்காக பேசியது இயக்கத்துக்காக பேசியவர் பேராசிரியர். அவர் வழியில் பயணித்து கழகத்தின் வெற்றியை உறுதி செய்வோம் என்று பதிவிட்டுள்ளார்.