கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு கிழக்கு கடற்கரை சாலையில் 31 ம் தேதி இரவு 10 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
கொரோனா அச்சுறுத்தலை அடுத்து வருகிற 31 ம் தேதி இரவு கிழக்கு கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. வழக்கமாக ECR சாலைகளில் புத்தாண்டு தினத்தன்று களைகட்டும்.தற்போது தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடலாம் என்பதால் மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 1000 க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை சாவடிகள் மற்றும் சாலையோர ரோந்து பணிகளில் ஈடுபட உள்ளனர்.
Read more – கொரோனா நிவாரண நிதிக்கு அதிபர் டிரம்ப் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் : ஜோ பைடன் கோரிக்கை
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தெரிவிக்கையில், முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை ஐந்திற்கு மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட இருக்கிறது.31 ம் தேதி இரவு 10 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் யாருக்கும் அனுமதி கிடையாது. விதிகளை மீறி செயல்படுவர்களுக்கு 144 விதிமுறை சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.