
நிர்வாண நிலையில் இறந்துகிடந்த கணவரின் சடலத்துடன் இரண்டு நாட்கள் பெண் ஒருவர் தனியாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த பாபு (53). இவர் மனைவி பத்மினி (48), ஒரு மகன், ஒரு மகள் ஆர்த்தி ஆகியோருடன் அங்குள்ள வைக்கோல் காரன் தெருவில் அவர் வசித்து வந்தார். மகன் வெளியூரில் வேலை பார்த்து வரும் நிலையில், மகளுக்கு திருமணமாகி கணவருடன் பெங்களூருவில் வசித்து வருகிறார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் தந்தை பாபுவுக்கு போன் செய்துள்ளார் மகன் ஆர்த்தி. ஆனால் போன் எடுக்கவில்லை. இதனால் கலக்கம் அடைந்த அவர் வேப்பேரி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். போலீசார் வீடு சென்று பார்த்தபோது, கதவு உள்ளே தாழிடப்பட்டு பூட்டப்பட்டு இருந்தது.
தொடர்ந்து சோதனை நடத்தியபோது படுத்திருந்த அசோக் பாபுவை பத்மினி பார்த்துக் கொண்டே இருந்தார். எவ்வளவு கூறியும் அவர் கதவை திறக்கவில்லை. இதனால் போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது தான் அசோக் பாபு இறந்துபோனது தெரியவந்தது.
உடனடியாக அவருடைய உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பத்மினிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, அவரை மனநல மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 174-ன் படி இயற்கைக்கு மாறான மரணம் என்ற அடிப்படையில் வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.