இன்னும் 2 மாதத்தில் அ.தி.மு.க. ஆட்சி முடிவுக்கு வந்துவிடும் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் :
தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்பொழுது அவர் கூறியதாவது ;
2019 ம் ஆண்டு இந்தியா முழுவதும் மோடி அலை வீசிய போதும், தமிழகத்தில் 38 தொகுதிகளில் திமுகவை வெற்றிபெற செய்தீர்கள். இதன் மூலம் தமிழகத்தை இந்தியா திரும்பி பார்த்த வைத்த பெருமையை தமிழக மக்கள் உங்களையே சேரும்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்வது போல தமிழகம் வெற்றிநடைபோடவில்லை. வெற்று நடைதான் மட்டுமே போடுகிறது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஆனால் இன்னும் அதற்கான கட்டிடம் கட்டப்படாமலே இருக்கிறது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்தும், கூவத்தூரில் டி.டி.வி. தினகரன் அதிமுக. எம்.எல்.ஏ.க்களுக்கு மது ஊற்றிக்கொடுத்தார் என்று சி.வி.சண்முகமே கூறியது அதிமுகவின் அறியாமை நிலையை குறிக்கிறது என்று தெரிவித்தார்.
இவர்களின் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப இன்னும் 2 மாதங்கள்தான் உள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்கு முடிவு கட்டும் தீர்ப்பை நீங்கள் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.