சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாக்களித்துவிட்டு கைகளை உயர்த்தினார்.
சென்னை :
தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தமாக 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு கொரோனா பரவலில் இருந்து மக்களை பாதுகாக்க சமூக இடைவெளியும் கடைபிடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
Read more – முதல் ஆளாக வாக்கினை பதிவு செய்த நடிகர் அஜித்….
சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினியுடன் முதல் ஆளாக வாக்கினை பதிவு செய்தார்.இந்தநிலையில், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாக்களித்துவிட்டு கைகளை உயர்த்தினார்.
அதேபோல், தியாகராய நகர் வாக்குச்சாவடியில் தந்தை சிவகுமாருடன், நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி வரிசையில் நின்று வாக்கு அளித்து வருகின்றனர்.