
அமெரிக்காவிலுள்ள மருத்துவமனை வளாகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளிக்குள் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நடத்திய 18 வயது இளைஞரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர்.
இந்த வேதனை அடங்குவதற்குள் ஓக்லஹோமாவிலுள்ள துல்சா மருத்துவமனை வளாகத்தில் மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. நேற்று மருத்துவமனை வளாகத்துக்குள் புகுந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஆயுதப்படை காவலர்கள், மர்ம நபரை சுட்டுக் கொன்றனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை துணைத் தலைவர் ஜொனாதன் ப்ரூக்ஸ் தெரிவித்துள்ளார்.