சீனாவில் இரண்டு மாடி உணவகக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் ஷாங்க்சி மாகாணத்திலுள்ள சியாங்பென் கவுண்டி பகுதியில் மிகப்பிரபலமான விருந்துக்கு பயன்படுத்தப்படும் இரண்டு மாடிகள் கொண்ட உணவகம் ஒன்று உள்ளது.
அந்த உணவகம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. அப்போது உணவகத்தில் மொத்தம் 45 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. அதில், 17 பேர் இறந்துள்ளதாகவும், 7 பேர் பலத்த காயமடைந்ததாகவும், 21 பேர் குறைவான காயங்களுடன் தப்பியதாகவும் அங்குள்ள ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த மீட்பு நடவடிக்கையில் 700 பேர் ஈடுபட்டதாக மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.