ஆண்கள் அனைவரும் கட்டாயம் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என எரித்திரியா அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாட்டில் செங்கடலை ஒட்டி அமைந்துள்ள குட்டிநாடு எரித்திரியா. இங்கு அடிக்கடி உள்நாட்டுப்போர் மற்றும் அண்டைநாடுகளுடன் போர் ஏற்படுவது வழக்கம். இதன்காரணமாக அந்தநாட்டில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இதனால், பலபெண்கள் திருமணம் ஆகாமல் காலத்தை கழித்து வருகின்றனர்.
இதன்காரணமாக எரித்திரியா அரசு ஆண்கள் இரண்டு திருமணம் செய்துகொள்ள வேண்டும் இல்லையேல் ஜெயிலுக்கு போக வேண்டும் என புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆண்கள் இரண்டு பெண்களுக்கு மேல் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம். திருமணம் செய்துகொள்ளும் முதல் பெண் மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது. அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களுக்கும் தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ஆண்கள் குஷியடைந்துள்ளனர். இவ்வாறான செய்தி ஒன்று சமூகவலைதளங்களில் பரவியது.ஆனால் இது உண்மையல்ல புரளி என்று எரித்திரியா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.