மலேரியா நோய் எந்த கொசுக்களின் மூலம் பரவுகிறது என்பதை கண்டறிந்த நாளே கொசுத்தினமாக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தினத்தில் கொசுக்கள் பற்றி சில தகவல்களை தெரிந்து கொள்வோம்…
பெண்ணின அனாஃபிலஸ் கொசுக்கள் தான் மலேரியா நோயினை ஏற்படுத்துகிறது என 1897 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் நாளில் பிரிட்டிஷ் டாக்டர் ரொனால்ட்டு ராஸ் என்பவர் கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்பினையடுத்து தான் ஒவ்வொரு ஆண்டும் அந்நாள் உலக கொசுக்கள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.
கொசுக்கள் என்றாலே மனிதர்களுக்கு தீங்கினை விளைவிக்கும் ஒரு காரணியாகவே மட்டுமே பார்க்கப்படுகிறது. மேலும் இதனால் ஏற்படும் தொல்லைகளும் அளவுக்கு மீறி தான் உள்ளது. சிறிய அளவில் உள்ள கொசுக்கள் நம்மை கடிக்கும் அளவிற்கு அத்தகைய பற்கூர்மை அதற்கு உள்ளதா என்ன? நிச்சயம் இல்லை என்றே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கொசுக்கள் குறித்து பல சுவாரஸ்சியமான தகவல்களையும் இங்கே பார்க்கலாம்…
கொசுக்கள் பற்றிய சுவாரஸ்சிய தகவல்கள்
கொசுகள் நம்மை கடிக்கிறது என்போம். ஆனால் கொசுக்களுக்கு பற்கள் கிடையாதாம்.
டைனோசர் காலம் முதலே வாழ்ந்து வந்ததாக கூறப்படும் இந்த கொசுகளுக்கு வெறும் இரண்டே மாதத்தை தன் ஆயுட்காலமாக உள்ளது. .
மனிதர்களின் உடலிருந்து பொதுவாக பெண் கொசுதான் இரத்தத்தை குடிக்கும் திறன் கொண்டது. ஒரே நேரத்தில் சுமார் 300 முட்டைகளை இடும் தன்மை கொண்டது.
கொசுக்களின் மூலம் மலேரியா, டெங்கு போன்ற பல்வேறு நோய்கள் மக்களுக்கு ஏற்படும் நிலையில் அதிலிருந்து தம்மை தற்காத்துக்கொள்வது தான் மனிதர்களின் பெரும் பொறுப்பாக உள்ளது. ஆம் நிச்சயம் நம்மை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்காமல், குப்பைகளை கொட்டி வைக்காமல் பாதுகாப்பான முறையில் வைத்துக்கொள்வதே கொசுக்களின் மூலம் நோய்கள் பரவாமல் தடுக்க சிறந்த வழியாக அமையும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.