Monday, March 2, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

நாய்களுக்காக தனி வீடு கட்டி, 26 ஆண்டுகளாக பாசத்தோடு வளர்க்கும் அலங்காநல்லூரைச் சேர்ந்த புஷ்பம் என்ற பெண்!

August 26, 2020
உலக நாய்கள் மற்றும் வளர்ப்போர் தினமான இன்று (ஆகஸ்ட் 26) நாய்கள் மீது அளப்பெரிய காதல் கொண்டு அவைகளுக்காகவே தனி வீடு கட்டி வளர்க்கும் அலங்காநல்லூர் புஷ்பத்தின் பாசம் பற்றி தெரிந்து கொள்வோம்.
நாய்களுக்காக தனி வீடு கட்டி, 26 ஆண்டுகளாக பாசத்தோடு வளர்க்கும் அலங்காநல்லூர் புஷ்பம்!

”நாய்களுக்கு மட்டும் பேசும் திறன் இருந்தால்  நிச்சயம் மற்ற மனிதர்களோடு நட்பு வைத்திருக்க வாய்ப்பில்லை என்பார்கள். அதற்கேற்ப நம்மை வளர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு தன்னிடம் இருக்கும் விசுவாசத்தை மட்டும் பரிசாக அளிப்பதில் ஐந்தறிவு ஜூவனான நம் நாய்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அப்படி சிறப்பு குணம் வாய்ந்த இந்த நாய்களை தன் பிள்ளைகள் போல் வளர்ப்போரையும், நாட்டு நாய் இனங்களை காக்கும் வகையில் கொண்டாடப்படும் தினம் தான் இன்று.

எத்தனையோ செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்த்து வந்தாலும் நம்மோடு நடைபயிற்சி முதல் விளையாடுவது வரை சந்தோஷத்தினை பகிர்ந்து கொள்வதில் நாய்களுக்கென்று தனிச்சிறப்பு உண்டு. வீட்டில் ஒரு நாய்க்குட்டி மட்டும் வளர்த்தாலே நமக்கு நேரம் போதாது.

உங்கள் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?

திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல; சில உள்ளங்களை! – ஸ்டாலின்

காவல்நிலையம் சூரை, ஆர்.பி.உதயகுமார் கைது, எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

ஆனால் நாய்களுக்காகவே ஒரு வீட்டினை கட்டி அதற்கு தேவையான உணவுகளை தயார் செய்து தன் பிள்ளைகள் போல் வளர்த்து வருகிறார் “மதுரை மாவட்டம்  அலங்காநல்லூரை சேர்ந்த புஷ்பம் என்ற பெண்”. உலக நாய்கள் மற்றும் வளர்ப்போர்க்கான தினத்தில் அவரைப்பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

நாய்களுக்காக தனி வீடு கட்டி, 26 ஆண்டுகளாக பாசத்தோடு வளர்க்கும் அலங்காநல்லூர் புஷ்பம்!
26 ஆண்டுகளாக நாய்களை வளர்க்கும் அலங்காநல்லூர் புஷ்பம்

அலங்காநல்லூரை பூர்வீகமாக கொண்ட இவர், நாய்கள் மீது அளப்பெரிய காதல் கொண்டவராய் வாழ்ந்து வருகிறார். இதற்காக தன் காம்பவுண்டில் உள்ள 12 வீடுகளில் ஒரு வீட்டினை ஒதுக்கி அதில் 10க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வருகிறார்.

ஏன் உங்களுக்கு மட்டும் இந்த நாய் வளர்ப்பில் இவ்வளவு ஈடுபாடு வந்தது எனக்கேட்ட போது, ”தான் கடந்த 26ஆண்டுகளாக நாய்களை பராமரித்து வருகிறேன். தன்னுடைய மகன் மற்றும் மகள் பள்ளி பருவத்திலேயே வெளியூரில் தங்கி படிக்க தொடங்கிவிட்டனர். அதனால் தனிமையை உணர்ந்த நான் தன்னுடன் இருப்பதற்காக ஒரு நாய்க்குட்டியை வளர்க்க ஆரம்பித்தேன்” எனவும் அந்த ஒற்றை நாய்க்குட்டி தன் மீது வைத்த பாசம் தான் தற்போது 10க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்து வருவதற்கு காரணமாக இருப்பதாக மகிழ்வுடன் தெரிவிக்கிறார்.

நாய்களுக்காக தனி வீடு கட்டி, 26 ஆண்டுகளாக பாசத்தோடு வளர்க்கும் அலங்காநல்லூர் புஷ்பம்!

அதோடு, தன்னுடைய காம்பவுண்ட் வீட்டில் இதற்காக ஒரு வீட்டினை தனியாக ஒதுக்கியதோடு, அதற்காக தனி சமையலும் செய்து வழங்கி வருகிறார். தன் பிள்ளைகள் போல் வளர்ப்பதால் இதன் உணவு மற்றும் பராமரிப்பு செலவுத்தொகையை ஒருபோதும்  கண்டுக்கொள்வதில்லை என்று சொல்லும் போதே அவர் நாய்கள் மீது கொண்ட காதல் வெளிப்பட்டது. இதற்கு ஒரு படி மேல் போய், வயது முதிர்வின் காரணமாக நாய் எதுவும் இருந்து விட்டால் மனிதர்களைப்போல இறுதி சடங்கு செய்து நல்ல முறையில் அடக்கம் செய்து விடுவோம் என்று கண்கள் கலங்க தெரிவிக்கிறார் அலங்காநல்லூர் புஷ்பம். நாய்களின் மீது இவர் வைத்த பாசமும், அரவணைப்பும் இன்னும் பல ஆண்டுகள் நிச்சயம் தொடர இந்நாளில் நாமும் சேர்ந்து அவரை வாழ்த்துவோம்.

நாய்களுக்காக தனி வீடு கட்டி, 26 ஆண்டுகளாக பாசத்தோடு வளர்க்கும் அலங்காநல்லூர் புஷ்பம்!

இந்த அலங்காநல்லூர் புஷ்பம் மட்டுமில்லை, உலகில் வாழும் அனைவரும் நாய்கள் மீது கொண்ட அன்பும் பாசமும் எப்பொழுதும் மாறாத ஒன்றாக தான் இருக்கும். இந்நாளில் நம் நாட்டு இன நாய்களாக சிப்பிப்பாறை, கோம்பை, இராஜபாளையம் நாய் போன்றவற்றை காக்க வேண்டும் என்ற குரலும் ஒருபோதும் இளைஞர்களிடம் வலுத்துவருகிறது.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

நட்சத்திர வீரர் மெஸ்ஸி பரசிலோனா கிளப் அணியில் இருந்து விலகல்!!!

Next Post

புகார் தெரிவிக்க ஆண்ட்ராய்டு செயலி அசத்தும் நீலகிரி போலீஸ் !!

Next Post

புகார் தெரிவிக்க ஆண்ட்ராய்டு செயலி அசத்தும் நீலகிரி போலீஸ் !!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version