Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home லைப் ஸ்டைல்

இது அவள் தவறல்ல!

September 7, 2020

என் தோழி ஒருத்தி, அவள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டாள். ஒரு குழந்தைக்குத் தாயாக இருக்கும் அவள், தன் ஐந்து மாதக் குழந்தையை தூங்க வைத்துவிட்டுத் தண்ணீர் குடிப்பதற்கு சென்றிருக்கிறாள்.

கட்டிலில் அவளுடைய கணவர் குழந்தையின் பக்கத்தில் படுத்திருந்தாலும், நன்றாகத் தூங்கிக் கொண்டு இருப்பவரைத் தொந்தரவு செய்ய வேண்டாமென எண்ணி, குழந்தையும் தூங்கிக் கொண்டுதானே இருக்கிறான் என்று நினைத்துவிட்டு தண்ணீர் குடிப்பதற்காக சமையலறைக்குள் சென்றிருக்கிறாள்.

11ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவர் அதிர்ச்சி சம்பவம்

இங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா?

மூட நம்பிக்கையால் 6 மாத குழந்தையை நரபலி கொடுத்த தாய்…கொடூர சம்பவம்…!!

அவள் சமையலறைக்கு சென்று தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கும்போது திடீரெனக் குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதும், கையில் வைத்திருந்த தண்ணீர்க் கோப்பையை கீழே போட்டுவிட்டு வேகமாக ஓடிவந்து பார்த்தால், குழந்தை கட்டிலில் இருந்து கீழே விழுந்து அழுது கொண்டிருந்திருக்கிறது.

அவள் செய்வதறியாதல் திகைத்துப் போய் அழுதுகொண்டு நின்றிருக்கிறாள். தூங்கிக் கொண்டிருந்த அவளுடைய கணவரும் வேகமாகத் தன் குழந்தையைத் தூக்கி கையில் வைத்துக் கொண்டு இருவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்று கொண்டிருக்கிறாள். அதற்குப்பின அழுகின்ற குழந்தையை சமாதானம் செய்வதற்கு இருவரும் முயற்சி செய்து கொண்டு இருந்திருக்கிறார்கள்.

அவர்களின் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த அவளுடைய மாமனாரும், மாமியாரும் என் தோழியின் அறைக்குள் வந்து பார்த்திருக்கிறார்கள். ஆனால் நல்லவேளை குழந்தைக்கு எதுவும் ஆகவில்லை.அதற்குப்பின் குழந்தை கீழே விழுந்துவிட்ட விஷயத்தை சொன்னவுடன் இருவரும் சேர்ந்து பயங்கரமாக அவளைத் திட்டியுள்ளனர். அதனால் பயங்கர மனவுளைச்சலுக்கு ஆளானாள் அவள்.

எந்தவொரு தாயும் தன் குழந்தையை வேண்டுமென்றே கீழே போடுவது கிடையாது. அன்று அவளுக்கு நடந்தது ஒரு விபத்துதான். தன் குழந்தை கீழே விழுவதைக் கண்டு ஒரு தாயாக அவள் வேதனைப்படுவதைவிடவா மற்றவர்கள் வேதனைப்படப் போகிறார்கள்?.

ஏற்கனவே குழந்தை விழுந்துவிட்டதே என்று குற்றவுணர்வில் தவித்துக் கொண்டிருந்த அவளுக்கு, அவளுடைய மாமனாரும், மாமியாரும் பேசிய பேச்சுக்கள் இன்னும் மிகுந்த மனவலியைத் தந்திருக்கிறது. இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையில் வீட்டிலுள்ள பெரியவர்கள், ஒரு தாயாக குற்றவுணர்வில் தவித்துக் கொண்டிருக்கும் அவளுக்கு ஆறுதலாக இருக்க வேண்டுமே தவிர கடுஞ்சொற்களால் நோகடிக்கக்கூடாது.

குழந்தை கீழே விழுந்ததும் அவளை ஆயிரம் குறைகூறும் வீட்டிலிருக்கும் பெரியவர்கள், பிஞ்சிக் குழந்தைகளை எப்படிக் கையாள வேண்டும்? என்பதை அவளுக்கு முன்கூட்டியே சொல்லியிருந்தால், ஒருவேளை அந்த விபத்தைத் தவிர்த்திருக்கலாம் இல்லையா? இதையேன் பெரியவர்கள் புரிந்து கொள்வதில்லையென எனக்குத் தெரியவில்லை.

This image has an empty alt attribute; its file name is baby-1-falling.jpeg

“நான்கு மாதக் குழந்தை எப்படி அவ்வளவுதூரம் நகர்ந்து வந்து,கீழே விழுந்தது டி? அக்குழந்தைக்கு சரியாகக் குப்புற விழவே தெரியாது? எப்படிக் கீழே விழுந்திருக்கும் ? இத்தனைக்கும் நான் கட்டிலின் நடுவில்தான் போட்டிருந்தேன்?” என்று அத்தனை கேள்விகளை என்னிடம் வைத்தாள் அவள்.

நான் அவளிடம் , “இப்போதெல்லாம் குழந்தைகள் ஹைப்பர் ஆக்டிவ்வாக இருக்கிறது டி. எப்போது எதை செய்யும் என்று நம்மால் கணிக்கவே முடியவில்லை. அதனால் நாம்தான் குழந்தைகளை மிக கவனமாகப் பார்க்க வேண்டியுள்ளது. என் குழந்தை பிறந்து இரண்டு மாதங்களிலேயே அவன் கால், கைகளை வேகமாக உதைத்து முண்டிக்கொண்டே கட்டில் முழுவதும் சுற்றி வருவான்”.

அதற்குப் பின் நாங்கள் கட்டிலிலிருந்து எங்கே விழுந்துவிடுவானோ என்று, கட்டிலை ஓரம் கட்டிவிட்டு மெத்தையை மட்டும் தரையின் மேல் போட்டுப் பயன்படுத்துகிறோம். அதுதான் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு, நாமும் குழந்தை தூங்கியதற்குப்பின்,”குழந்தை எங்கே கீழே விழுந்துவிடுவானோ?” என்ற பயமில்லாமல் நம் மற்ற வீட்டுவேலைகளை செய்யலாம்” என்று அவளுக்கு அறிவுரை சொன்னேன். அவளும் “சரி டி, இனிமேல் நாங்களும் அதையே பின்பற்றுகிறோம். தேங்க்ஸ் டி” என்று சொன்னாள்.

This image has an empty alt attribute; its file name is babay-playing-in-bed-2.jpeg

இது என் தோழிக்கு மட்டுமல்ல, கைக் குழந்தையை வைத்திருக்கும் அனைவருக்கும் ஏற்ற அறிவுரைதான். அதனால் மக்களே உங்கள் குழந்தைகள் பிறந்து இரண்டு மாதமேயான பச்சைக் குழந்தையானாலும் சரி, கட்டிலில் போடுவதைத் தவிருங்கள். அப்படி வேறு வழியில்லாமல் கட்டிலில் போட்டாலும் மிக கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு வேறு வேலை ஏதாவது இருந்தால், தூங்கிக் கொண்டிருக்கும் உங்கள் குழந்தையை வேறு யாரையாவது பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு செல்லுங்கள். தனியாகக் குழந்தைகளைக் கட்டிலில் போடாதீர்கள்.! பிஞ்சிக் குழந்தைகளைக் கையாளுவது என்பது கடினமான ஒன்றே! எனவே ஒவ்வொரு விஷயமும் நாம் பார்த்து பார்த்து செய்ய வேண்டும் !.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க அவகாசம் நீட்டிப்பு – உயர்நீதிமன்றம்

Next Post

கொரோனாவிலிருந்து மீண்டார் எஸ்.பி.பி! எஸ்.பி.சரண் தகவல்!

Next Post

கொரோனாவிலிருந்து மீண்டார் எஸ்.பி.பி! எஸ்.பி.சரண் தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version