நடிகர் ஆதி நடிகை நிக்கி கல்ராணியை காதலித்து வருவதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளட்டது.
தெலுங்கு நடிகரான ஆதி தமிழில் மிருகம் படம் மூலம் அறிமுகமானவர். இவர் ஈரம், அரவாண், மரகத நாணயம், ஆடுபுலி, யாகாவாராயினும் நாகாக்க உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள இவர், நிக்கி கல்ராணியுடன் இணைந்து மரகத நாணயம் மற்றும் யாகாவாராயினும் நாகாக்க ஆகிய படங்களில் நடித்துள்ளார். நிக்கி தமிழில் டார்லிங் படம் மூலம் அறிமுகமானவர். அதன்பின் ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2, சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் நெருங்கி பழகி வந்த இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகின்றது. ஆனால் தங்களின் காதல் பற்றிய விஷயத்தை வெளியே கசிய விடாமல் ரகசியம் காத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆதியின் தந்தை பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கால் யாரையும் அழைக்காத ஆதி, நிக்கி கல்ராணியை மட்டும் அழைத்துள்ளார். அவரும் அந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து தெலுங்கு சினிமா உலகில் பலரும் இவர்கள் சில ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறி வருகின்றனர். ஆனால் ஆதியும், நிக்கியும் இதுவரை இந்த தகவலுக்கு பதிலளிக்கவில்லை.