அமெரிக்க அதிகாரிகளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது என்று சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.இருநாட்டவருக்கும் இடையே கடுமையான கருத்து மோதல் வலுத்து வரும் நிலையில் சீன அதிகாரிகளுக்கு விசா மறுப்பு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா பொருளாதார வல்லரசு நாடாக இருப்பது பொறுக்க முடியாமல் சீனா தனது கம்யூனிச கொள்கையை உலகம் முழுவதும் பரப்புவதற்காக அமெரிக்காவில் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்த முயற்சிப்பதாக அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பில் பார் சாடினார்.
இதற்கு பதிலளித்த சீனாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூவா சுன்யிங், தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா அபாண்டமாக குற்றம் சாட்டுவதாகவும், அந்நாட்டு அதிகாரிகளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாகவும் சாடினார்.