ஐ.நா. பொது சபையின் கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாக ஐ.நா. இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:
வருகின்ற செப்.21( திங்கள்கிழமை) தொடங்க உள்ள ஐ.நா. பொது சபையின் கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்க இருப்பதாக ஐ.நா. இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
முதல் அமர்வில் நாட்டின் நிலைப்பாடு தொடர்பாக பிரதமர் உரையாற்ற உள்ளதாகவும்,இரண்டாவது அமர்வு ஐ.நா. பொது சபை உருவாக்கப்பட்ட 75 வது ஆண்டு சிறப்பு அமர்வில் பிரதமர் உரையாற்றுவார் என்று டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.




