உழவன் கணக்குப் பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது என்பதுபோல் மனிதனின் வாழ்க்கையில் உள்ள கஷ்ட- நஷ்டங்களைக் கணக்குப் பார்த்தால் இந்த உலகமே மிஞ்சாது.

நாமொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைப்பது என்பது இன்று நேற்றல்ல ஆதிகாலத்திலிருந்து தொடரும் முரணான பந்தம் இது. ஆனால் ஒன்றை இழப்பற்காகப் கவலைப்பட்டு அந்த வருத்தப் புழுதியிலேயே நாம் காலூன்றக்கூடாது.
உனக்குக் கற்பனை இல்லை என்று கல்லூரியிலிருந்து நிராகரிக்கப்பட்டவர்தான் உலகில் அதிக ஆஸ்கார் விருதுகளைத் தனக்குச் சொந்தமாக்கி அமெரிக்கா டிஸ்லிலேண்ட் எனும் பூங்காவையே உருவாக்கி வைத்து இன்று இளைஞர் இளைஞிகள் சிறுவர் சிறுமிகளைத் தனதுப் படைப்புத்திறனின் மூலம் கவர்ந்தார். அவரது முயற்சி அந்த நிறுவனத்தால் இன்றும் தொடர்ந்து உலகில் வெற்றிக் கொடி நாட்டி வருகிறது.
60 வயதுக்கு மேல் உருப்படியாக எதுவும் இல்லாத நிலையில் தன் திறமையைப் பகுத்துணர்ந்து (KFC) சிக்கன் பீஸை விற்பனை செய்ய ஒரு ஸ்டாலை திறந்து அதன் மூலம் குறுகிய காலத்தில் தன் தனித்திறதாலும் தொழிலார்வத்தாலும் கடின உழைப்பாலும் கோடீஸ்வராக உயர்ந்த ஓர்லண்ட் டேவிட் சாண்டர்ஸ் –ன் வாழ்க்கை வீழ்ந்தாலும் மேலே எழுந்து வரச் சொல்லி நமக்குச் சொல்லிக்கொடுக்கிறது.
தனது நாற்பதாண்டு வாழ்க்கைக்குப் பிறகு நீண்டநேரம் மெழுகுவெளிச்சத்தில் அமர்ந்து புத்தகங்களில் காவியமும் –இதிகாசமும், போர்களும் , காப்பியங்களும், கவிதைகளும், ஓவியங்களும், உரைநடைகளும் செய்யுள்களும், மதநூல்கலும் படித்துத்தேர்ந்து அறிவுச்சால்புடையோராகவும், விளங்கிய மில்டன் தனது கண்பார்வை இழந்து பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் இழந்தசொர்க்கம் என்ற பெருங்காவியத்தை இயற்றி அதுவரை ஒரு ஆட்டின் பின்னே சென்றுகொண்டிருந்த உலக இலக்கியப்பெருவளிக்கு ஒரு மடைமாற்றத்தை உருவாக்கி கவிஞர்களுக்கு எல்லாம் கவி அரசனானார்.
காரல் மார்ஸ்கின் கம்யூனிசத்தத்துவங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்து கல்வி – மருத்துவம் – தண்ணீர் போன்றவரை அரசால் இலவசமாக மக்களுக்குக் கொடுக்கவேண்டும் என்று முழக்கமிட்ட, அக்டோபர் புரச்சியின் நாயகனு சோவியத்தின் மறுமலர்ச்சிப் பிதாமகனுமான லெனின்கு வக்கீல் படிப்புப் படிக்க இடம் கிடைக்கவில்லை ஆனால். ஆறு வருட படிப்பை இரண்டே ஆண்டுகளில் படுத்துக் கரைத்துக் குடித்து மக்களின் பணிநேரத்தைக் குறித்து ஜனநாயக முறையில் நாட்டை வழிநடத்தி சோஷிலிசப்பாதைக்கு தன் செயல் மூலம் வழிகாட்டியவர் அவர்.
உலகமே வெறுக்கக்கூடிய பெயராகவும், தனது ஊர் ஆஸ்திரியாகவாக இருந்தாலும் பிழைக்க வந்த ஊர் ஜெர்மனின் என்றாலும் அந்த நாட்டின் மீது தீராத தேசப்பக்தி கொண்டு கண்மூடித்தனமாக இனவாதத்தைக்கையில் எடுத்து, அதே நாட்டு மக்கள் எழுதாண்டுகளுக்கு மேலாய் வெறுத்து வருகிற உலகமே ஒருகாலத்தில் அவரது பெயரைக்கேட்டாலே நடுங்கும் அளவு மரண பீதியையும் போர் பீதியை ஏற்படுத்தியவரும், உலகில் எந்தவொரு பொதுநூலத்திலும் இவரின் புத்தகத்தை வைக்கக்கூடாது என்று அமல்படுதாத வாய்மொழிச் சட்டமாகப் பின்பற்றப்படுகிறவருமான ஹிட்லரும் சிறு வயதில் ஓவியக் கல்லூரியில் சேர லாயிக்கு இல்லை என்று புறக்கணிக்கப்பட்டவர்கள். இத்தனைக்கும் அவர் சிறந்த ஓவியர். கலைநேசர். அதற்காகக் கண்கலங்காமல் முதல் உலகப் போரில் தன் உயிரைப் பணயம் வைத்து முதல் உலகப் போரில் துப்பாக்கிக் குண்டுகளுக்கும், பீரங்கிக் குண்டுகளுக்கும் இடையில் ஓடிஓடி துரிதமாகச் செயல்பட்டு செய்திகளையும் தகவல்களையும் கொண்டுசெல்லும் ஒரு சாதாரண ஊழியராக ராணுவத்தில் இருந்தவருக்கு அப்போரில் அவர் ஈடுபட்ட வேலயின் காரணமாகப் பதவி உயர்ந்தார். கடைசியில் தனது மக்கள் பிரதிநிதி ஆட்சியில் சர்வாதிகாரியாகி, உணர்ச்சிபொங்க மக்களிடம் பேசிப்பேசி, நாட்டில் பல சீரமைப்புகளைச் செய்தார். அதுவும் குறுகியகாலத்தில். ஆனால் இனப்பேதம்,. கொலைதாண்டவம், போர்வெறி இவை மூன்றும் இல்லாமலிருந்தால் ஜெர்மனி இன்றிருக்கவேண்டிய வல்லரசு இடத்தை அமெரிக்காகூட பிடித்திருக்குமா என்பது சந்தேகமே.
மேற்சொன்னவர்கள் வாய்ப்புக்காகக் காத்திருக்காமல் வாய்ப்புகளை உருவாக்கி உலகில் தன் சாதனையின் மூலம் வெற்றிகளை நிரூபித்தனர். அதனால் இருக்கும் நிலைமையைத் தற்காலியம் என்று ஏற்று, ,படிப்போ, செல்வமோ, கல்வியோ, மக்கள் செல்வாக்காவோ, பதவியோ, எதுவாக இருந்தாலும் நாம் எதிர்க்காலத்தில் பெற வேண்டிது எனத் தீர்மானித்து எதையும் நேர்மையான மற்றும் கடின உழைப்பால் பெற முயல்வோம்.
நன்றி:சினோஜ்




