அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகளுக்கிடையே இன்று அக்கட்சியின் செயற்குழு கூட்டம் கூடுகிறது. இக்கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பது முடிவுக்கு வந்துவிடுமா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகளவில் எழுந்து வருகிறது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் முழுமையான வெற்றியோடு மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும் என அ.தி.முக கட்சி தயாராகி வருகிறது. இதனிடையே தான் அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்சனை எழத்தொடங்கியது. தேனி, பெரியகுளத்தில் பிரம்மாண்ட போஸ்டர்களுடன் ஓ.பி.எஸ் தான் முதல்வர் என்றதும், இ.பிஎஸ் தரப்பு அதன் பங்கிற்கு வேலையினை காட்டத்தொடங்கியது. இந்நிலையில் தான் துணை முதலமைச்சர் இல்லங்களுக்கு மாறி மாறி சென்று பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள், பிரச்சனைக்கு தற்காலிகமாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கருத்து கூற அதிமுக நிர்வாகிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்த சூழலில் தான் அதிமுக கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதில் கட்சியிலிருந்து 284 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதிமுக கட்சியில் நிலவும் உட்கட்சி பிரசசனை சரியாகிவிடும் என்ற எதிர்ப்பார்ப்பு பெருமளவில் ஏற்பட்டுள்ளது.
அதிமுக செயற்குழு கூட்டத்தில் கொரோனா
அதிகமு கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க 284 நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அனைவரும் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில், 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.