வாலிபருடன் ஏற்பட்ட காதல் காரணமாக மனைவியை விவகாரத்து செய்துவிட்டு, இளைஞரனை கணவன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பொல்லரிமாடி கிராமத்தை சேர்ந்தவர் டாக்டர் சரத் பொன்னப்பா. இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். சரத் பொன்னப்பா அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு வட இந்தியாவைச் சேர்ந்த வாலிபரான தருண் சந்தீப் தேசாய் என்பவரின் நட்பு கிடைத்துள்ளது.
இவர்கள் ஆரமத்தில் சாதாரணமாக நண்பர்களாகவே இருந்து வந்துள்ளனர். இவர்களின் நட்பு நாளுக்கு நாள் வலுவடைய தொடங்கியுள்ளது. நல்ல நண்பர்களாக இருந்து நெருங்கிய நான்பண்ர்களாக இருந்து வந்துள்ளனர். பின்னர் நாளடைவில் இவர்களின் நட்பு ஓரினசேர்கையாக மாறியுள்ளது. இதனை பின்னர் சரத் பொன்னப்பா, தருண் சந்தீப் தேசாய்யுடன் நெருக்கமாக இருந்ததால் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.இதன் காரணமாக அவர் மனைவியை விவகாரத்து செய்தார்.
இதையடுத்து, கடந்த மாதம் 25-ஆம் தேதி சரத் பொன்னப்பா, தருண் சந்தீப் தேசாயை திருமணம் செய்துகொண்டார். சாதாரணமாக ஒரு திருமணம் எப்படி நடைபெறுமா அதேபோல் இவர்களின் திருமணமும் இரு தரப்பில் இருந்தும் ஆடைகள் வரவைக்கப்பட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். இருவரும் கொடவா சமுதாய மக்களின் பாரம்பரிய உடை அணிந்து, நீண்ட வாள், கத்தி, தலைப்பாகை உள்ளிட்டவை அணிந்து கொடவா சமுதாய பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணம் குறித்து குடகு கொடவா சமுதாய நிர்வாகி ஒருவர், இந்த திருமணம் இயற்கைக்கு விரோதமானது. இவ்வாறு திருமணம் செய்துகொள்பவர்கள் நீண்ட நாட்கள் சேர்ந்து வாழ முடியாது என கூறியுள்ளார். இவர்கள் வெளிநாடுபோல் இங்கு வாழ நினைக்குறேன். இது நம் கலாச்சாரத்திற்கு எதிரானது ஆதலால் இதை நாங்கள் மாணிக்கமாட்டோம் என கூறியுள்ளனர்.




