இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது., அம்மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே பொதுமக்களுடன் இணைய வாயிலாகப் பேசினார்.

மகாராஷ்டிராவில் 70 முதல் 80 சதவீதத்தினருக்கு கொரோனா அறிகுறியில்லாமல் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர் என்று முதல் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் கண்டறியும் வரை முகக் கவசம் மட்டுமே தற்காப்புக் கவசமாக பயன்படுத்த வேண்டும். இதில் வெற்றி கொள்ள மக்களின் அர்ப்பணிப்பும், ஈடுபாடும் அவசியம்.
முகக் கவசத்தை அணிய வேண்டுமா, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டுமா அல்லது கட்டுப்பாடுகளுடனே இருக்க வேண்டுமா என்பதை மக்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.
தற்போது துவங்கப்பட்டுள்ள எதுவும் மீண்டும் மூடப்படாது. அதிக அளவு மக்கள் பயணிப்பர் என்பதால் புறநகர் ரயில் சேவை துவங்க நான் விரும்பவில்லை என்று தெரிவித்தார்.




