மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று 44 பாலங்களைத் திறந்து வைக்கிறார்.
சமீபத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதியான லடாக்கில் சீன ராணுவத்தினர் அத்துமீறி இந்திய ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினர்.
இதற்குப் பதிலடியாக இந்திய ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் சீன ராணுவத்தின் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, சீனாவின் செயலைக் கண்டித்து இந்தியாவிலுள்ள சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல் இந்திய ராணுவத்தினர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தவேண்டாம் என கூறப்பட்டது.
அண்மையில் இந்திய – சீன எல்லையில் மீண்டும் சீன ராணுவத்தினர் 60 ஆயிரம் ராணுவத்தினரை நிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்கா தகவல் தெரிவித்தது.
இந்நிலையில், எல்லைப்பகுதி சாலை இணைப்பின் அமைப்பு BRO கட்டியுள்ள 44 பாலங்களை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இப்பாலம் உத்தரகாண்ட், அருணாச்சலப் பிரதேசம், இமாச்சல் பிரதேசம் ,பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் , லடாக் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் இப்பாலங்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தச் சாலை வழியாக ராணுவத்தினரின் தளவாடங்கள்,போர்க்கருவிகளை விரைவாக அனுப்பி வைக்க இவை உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.