தவான் மற்றும் ஐயரின் அரைசதத்தால் ராஜஸ்தான் அணிக்கு 162 ரன்கள் இலக்காக வழங்கியது டெல்லி அணி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.அதனை தொடர்ந்து டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக பிரித்திவி சா,தவான் களம் இறங்கினர்.ஆர்ச்சர் வீசிய முதல் ஓவர் முதல் பந்தே பிரித்திவி சா ரன் எதுவுமின்றி கிளீன் போல்ட் ஆக,அடுத்து வந்த ரஹானேவும் 2 ரன்களுடன் ஆர்ச்சரிடம் அவுட் ஆனார்.
மறுமுனையில் அடித்து ஆடிய தொடக்க வீரர் தவான் 30 பந்துகளில் 50 ரன்களை கடக்க,11 ஓவர் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட் இழந்து 86 ரன்கள் எடுத்து இருந்தது.12 வது ஓவர் வீசிய ஷ்ரேயாஸ் கோபால் பந்தில் தவான்(57 ரன்கள்,33 பந்துகள்) ஒரு சிக்ஸர் அடித்து தியாகியிடம் கேட்ச் கொடுக்க,டெல்லி கேப்டன் ஐயர் உடன் இணைந்தார் ஸ்டொய்னிஸ்.இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த டெல்லியின் ஸ்கோர் 14 ஓவர்களில் 112 ரன்கள் பெற்று இருந்தது.உனட்கட் வீசிய 15 ஓவரில் ஷ்ரேயாஸ் ஐயர் அட்டகாசமாய் 2 சிக்ஸர்கள் அடித்து 40 பந்துகளில் 50 ரன்களை கடந்தார்.

தியாகி வீசிய 16 வது ஓவர் முடிவில் ஷ்ரேயாஸ் ஐயர் அவுட் ஆகி வெளியேற டெல்லி அணி 4 விக்கெட் இழந்து 132 ரன்களுடன் இருந்தது.அடுத்து வந்த அலெக்ஸ் கேரி ஆர்ச்சர் பந்தில் ஒரு சிக்ஸர் தெறிக்கவிட,18.2 ஓவர்களில் டெல்லி அணி 150 ரன்களை கடந்த உடனே அதே ஓவரில் ஸ்டொய்னிஸ்(18 ரன்கள்,19 பந்துகள்) திவாதியாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.கடைசி ஓவர் வீசிய உனட்கட் அந்த ஓவரில் கேரி மற்றும் அக்சார் விக்கெட் எடுத்து அசத்த,20 ஓவர் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழந்து 161 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணிக்கு 162 ரன்கள் இலக்காக வழங்கியது.




