
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா பாதித்தப் பெண்ணை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த செக்யூரிட்டியே பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மும்பையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் கொரோனா பாதித்த 21 வயதான இளம்பெண் தனி அறையில் சிகிச்சை பெற்று வந்தார். நள்ளிரவு 2.30 மணியளவில் செக்யூரிட்டி சூரஜ் என்பவன் திடீரென்று அறையில் நுழைந்து ஆக்சிஜன் அளவை சரிபார்ப்பதுபோல் சரிசெய்து பாலியல் துன்புறுத்துதலில் ஈடுபட்டுள்ளான்.
எதிர்பாராத கொடுமையால் அதிர்ந்துப்போன அப்பெண், எச்சரிக்கை மணியை தொடர்ந்து அடிக்கவே, பதறியடித்து ஓடிவந்த மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் திரண்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட செக்யூரிட்டியை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர், வேலியே பயிரை மேய்ந்த கதை போல் பாதுகாப்பு பணிக்காக வந்த செக்யூரிட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது மருத்துவ மனை தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




