சிவகங்கையில் சிறுமியைக் கொலை செய்து சுவரில் வைத்து பூசியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் திருப்பூரில் டைலராக பணியாற்றுகிறார். இவர் மனைவி உஷா, மகன் அஜய்குமார், மகள் ஆகியோருடன் இந்திராநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மாற்றுத்திறனாளியான அட்ஷயா அருகில் உள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயிலுகிறார். 2013 ஜூலை 4-ம் தேதி இயற்கை உபாதை கழிக்க சென்ற அட்ஷயாவை காணவில்லை. இதுகுறித்து அவரது தாயார் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சில நாட்கள் கழித்து பக்கத்தில் உள்ள மக்கள் விடுதலை இயக்க அலுவலகத்தில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. அதனை சோதனை செய்து பாதத்தில் குழந்தை அட்ஷயாவின் உடலை சாக்குப்பையில் கட்டி அந்த அலுவலக சுவரில் வைத்து பூசப்பட்டது தெரியவந்தது.
மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த அலுவலகத்தில் தங்கி இருந்து ராமநாதபுரம் மாவட்டம் பாண்டுகுடியைச் சேர்ந்த அமல்ராஜ் என்பவரே அட்ஷயாவை கொலை செய்தார் என்பது தெரியவந்துள்ளது. இவரை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி அமல்ராஜ்க்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.