ஜெர்மனியின் ரெட்டன்பெர்க் நகரத்தின் மலை உச்சியில் நிறுவப்பட்டிருந்த 7 அடி உயர ஆணுறுப்பு சிலை மாயமானதால் அதை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

ஜெர்மனியின் ரெட்டன்பெர்க் நகரத்தின் மலை உச்சியில் நிறுவப்பட்டிருந்த 7 அடி உயர ஆணுறுப்பு சிலை அந்நாட்டு கலாச்சார சின்னங்களில் ஒன்றாகவும், சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. இந்த நிலையில் அந்த மரச்சிலை காணாமல் போகியுள்ளது. பல வருடங்களாக ரெட்டன்பெர்க் நகரத்தின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கி வந்த அந்த மரச்சிலை காணாமல் போனதால், அதை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். காணாமல் போன அந்த மரச்சிலையை அப்பகுதி மக்கள் ‘Holzpenis‘ என்று பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர்.
இதுகுறித்து ரெட்டன்பெர்க் நகரில் வெளியாகும் பத்திரிக்கை ஒன்றில் வெளியான செய்தியில், காணாமல் போன 7 அடி உயர ஆணுறுப்பு சிலையை யாரோ அறுத்து எடுத்து சென்றதற்கான ஆதாரம் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த சிலையானது பலவருடங்களுக்கு முன் விளையாட்டாய் ஒருவருக்கு பிறந்தநாள் பரிசாக அளிக்கப்பட்டது எனவும், அவரது குடும்பத்தினர் இதை ஏற்றுக்கொள்ளாததால் இந்த சிலை மலை உச்சியில் நிறுவப்பட்டது என ஒரு கதை இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படியுங்கள் : சீனாவுடன் கைகோர்த்த பாகிஸ்தான்




