அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யத்தை மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று உறுப்பினர்களுக்கு கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை :
மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னையை அடுத்த வானகரத்தில் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து 5 மணி நேரம் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில் துணைத்தலைவர் மகேந்திரன், பொதுச்செயலாளர்கள் ஏ.ஜி.மவுரியா, சந்தோஷ்பாபு, ஸ்ரீபிரியா, கமிலா நாசர், கவிஞர் சினேகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மக்கள் நீதி மய்யத்தின் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் முன்னிலையில் பேசியதாவது:
அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் யோக்கியமான கட்சிகள் கிடையாது. இந்த 2 கட்சிகளும் தமிழகத்தின் நலன் காக்கவில்லை. அவர்களை மட்டுமே காத்துக்கொண்டனர். 2 கட்சிகளுக்கும் மாறாக மக்கள் நீதி மய்யம் தமிழகத்தில் வலிமை பெற வேண்டும். அதனால் தான் ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற முழக்கத்துடன் புதிய கட்சி தொடங்கி இருக்கிறோம். நாம் அனைவரும் ஒன்றுபட்டு மக்கள் நீதி மய்யத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் ஊழல் கட்சிகள் தான். ஊழல் செய்யும் கட்சிகளுடன் ஒருபோதும் மக்கள் நீதி மய்யம் கூட்டணி வைக்கப்போவதில்லை. நமது கட்சியில் யாரேனும் ஊழல் செய்ய வேண்டும் என்ற திட்டம் இருந்தால் இந்த மண்டபத்தின் இருந்து இப்பொழுதே வெளியேறிவிடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
Read more – ஒரு வாய் சோறுக்காக அதிமுகவில் சேர்ந்த மக்கள்.. அன்னதானம் சாப்பிட வந்தவர்களை கட்சியில் இணைத்த கூத்து..
மக்கள் நீதி மய்யத்தின் குடும்பத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்கு மாணவர்கள், இளைஞர்களை அதிக அளவில் கட்சியில் சேருங்கள். அவர்கள் தான் அடுத்த தலைவர்கள். எனது 2 மகள்கள் இங்கு வரப்போவதில்லை. இங்கு வாரிசு அரசியலுக்கு இடம் கிடையாது. கட்சி உறுப்பினர்களே எனது உயிர். நாம் மாபெரும் வெற்றி பெற்று சரித்திரத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.