Wednesday, March 4, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home செய்திகள்

மூவரைக் கொன்ற முரட்டு யானை ‘சங்கர்’ : பந்தலூரில் வனத்துறையிடம் பிடிபட்டது

February 12, 2021

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே, சேரம்பாடி வனச்சரகத்தில், மூவரைக் கொன்ற இந்த யானையைக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிடிக்க முற்பட்டபோது, யானை கேரள வனத்துக்குச் சென்றது.

இந்நிலையில், கடந்த 4-ம் தேதி ஒற்றைக் கொம்பன் மீண்டும் சேரம்பாடி வனப்பகுதியில் நடமாடியது. எனவே, மீண்டும் யானையைப் பிடிக்கும் பணி தொடங்கியது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!

காஸாவிற்கு ஆதரவாகத் தீர்மானம் – மு.க.ஸ்டாலின்

வனத்துறையினர்

கால்நடை மருத்துவர்கள் மனோகரன், சுகுமாரன் ஆகியோர் தலைமையில் மருத்துவக் குழுவினர் சேரம்பாடி வனப்பகுதியில் முகாமிட்டனர். இந்நிலையில், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் மாநில அரசு, விருதுநகர் வனக்கோட்டம் பறக்கும் படையைச் சேர்ந்த வனச்சரகர் முருகவேல், வனவர் முத்துராமலிங்கம் ஆகியோர் தலைமையில் 9 பேர் கொண்ட சிறப்புக் கண்காணிப்புக் குழுவை அமைத்தது. இக்குழுவினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கூடலூர் வன அலுவலர் குருசாமி தபேலா மேற்பார்வையில், வனத்துறையினர் 40 பேர், யானையைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சுஜய், சீனிவாசன் கும்கி யானைகள் களமிறக்கப்பட்டன.

இந்நிலையில், கோவை வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர் தினேஷ்குமார் தலைமையில் 11 பேர் அடங்கிய சிறப்புக் குழு யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டது.

மயக்க ஊசிக்கு மயங்கவில்லை

கடந்த, எட்டு நாட்களாக யானையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்ட நிலையில், நேற்று (பிப். 11) கால்நடை மருத்துவர் மனோகரன் மயக்க ஊசி செலுத்தினார். யானையைப் பிடித்து முதுமலைக்குக் கொண்டு செல்ல இருந்த நிலையில், குத்திய ஊசியுடன், யானை காட்டுக்குள் ஓடி தப்பியது.

அந்த யானையை சில யானைகள் தனியாக விடாமல், ஆரத்தழுவி, பாசத்தை வெளிப்படுத்தி அரண் போல் நின்றன. இதனால் வனக்குழுவினரால் யானையை நெருங்க முடியவில்லை.

இதனால் யானை மீண்டும் கேரள வனப்பகுதிக்குச் சென்றுவிடுமோ என மக்கள் எண்ணினர்.

பெரும் போராட்டத்திற்கு பின்னர் பிடிபட்டது

இந்நிலையில், இன்று மதியம் வனத்துறையினர் கூட்டத்தில் இருந்து ஒற்றை யானையைத் தனியாகப் பிரித்து மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். பின்னர், யானையை கும்கிகள் உதவியுடன் கயிற்றால் கட்டினர்.

வனத்துறையினர் கூறும்போது, “இந்த யானை அடுத்து யாரையேனும் தாக்கிவிட்டால் நிலைமை சிக்கலாகிவிடும். இந்த யானை விவசாயப் பயிர்களைச் சேதப்படுத்துவதில்லை.

மனிதர்களைத் தாக்கும். அதற்காகவே குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்து செல்கிறது என்பதையும் நாங்கள் கண்டறிந்தோம்.

எனவே, கால்நடை மருத்துவக் குழுவினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். இந்த யானை முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட அபாயரணயம் முகாமில் அமைக்கப்பட்டுள்ள கராலில் அடைக்கப்படும்.

அங்கு பழக்கப்படுத்தப்பட்டு, வளர்ப்பு யானையாக மாற்றப்படும்” என்றனர்.

Share this:

  • Click to share on Facebook (Opens in new window) Facebook
  • Click to share on X (Opens in new window) X
Previous Post

மெயில் மோட்டார் சர்வீஸ் வேலைவாய்ப்புகள் 2021

Next Post

NBCC-தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2021

Next Post

NBCC-தேசிய கட்டிடங்கள் கட்டுமானக் கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2021

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

” இது சுத்தமான அரசியல் சதி… ” – கொந்தளிக்கும் தவெக தொண்டர்கள் … பின்னணியில் யார்?

February 28, 2026

மருத்துவ மாணவனுக்கு உக்ரைனில் நேர்ந்த கொடுமை… துணிந்து மீட்ட துரை வைகோ…!

January 28, 2026

கல்லறை கேட்டு கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம்

December 17, 2025

பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு

December 13, 2025

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்!

November 26, 2025

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

November 20, 2025
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version