வங்கி கடன் தவணை செலுத்துவதற்கு அளிக்கப்பட்ட சலுகையை நீட்டிக்கக் கூடாது என, தனியார் துறை வங்கிகள், ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

கடந்த மார்ச், 25ல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, அனைத்து கடன்களுக்கான தவணை செலுத்துவதை, மார்ச்-மே வரை, ரிசர்வ் வங்கி தள்ளி வைத்தது. பின், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதை அடுத்து, ஆகஸ்ட் வரை, சலுகையும் நீட்டிக்கப்பட்டது.அதன்படி, கடன்தாரர்கள், செப்., முதல் கடன் தவணையை செலுத்த வேண்டும். இந்நிலையில், நேற்று(ஜூலை 27), ரிசர்வ் வங்கி கவர்னர், சக்திகாந்த தாஸ், இந்திய தொழிலக கூட்டமைப்பின் கூட்டத்தில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பங்கேற்றார்.
