இந்திய தயாரிப்பு பொருட்களின் ஏற்றுமதியை 3 மடங்கிற்கு அதிகரிக்க, வால்மார்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
சர்வதேச அளவிலான வணிகத்தில், வால்மார்ட் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவில் இருந்து ஆண்டிற்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை அந்நிறுவனம் ஏற்றுமதி செய்து வருகிறது. இதில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நகைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்நிலையில், இந்திய தயாரிப்பு பொருட்களின் ஏற்றுமதியை 2027க்குள், ஆண்டிற்கு 73 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்த உள்ளதாக, வால்மார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பில், தெற்காசிய பொருட்களை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் வகையில், இந்திய உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதியை 3 மடங்ககாக உயர்த்த உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை ஆதரிப்பதோடு, உள்ளூர் பொருட்கள் சர்வதேச வாடிக்கையாளர்களை அடைய உதவுவதாகவும், வால்மார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம், இந்திய பொருட்களுக்கான தேவை சர்வதேச சந்தையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சிறு,குறு நிறுவனங்களும் வளர்ச்சி அடையும் என கூறப்படுகிறது.