தளபதி விஜய் தனது ரசிகர்களுடன் எடுத்த வெளியிட்ட, செல்பி புகைப்படம் ட்விட்டரில் சாதனை படைத்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘மாஸ்டர்’. இந்த படத்த்திற்கான படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதனிடையே, நெய்வேலியில் நடந்த இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பின் போது, விஜய் வீட்டில் வருமானவரிச் சோதனை நடந்தது.
இதன் விசாரணைக்காக நெய்வேலி படப்பிடிப்பிலிருந்து சென்னைக்கு விஜய் அழைத்து வரப்பட்ட சம்பவம் திரையுலகம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது.
வருமானவரிச் சோதனை முடிந்த பின்னர், வழக்கம்போல் விஜய் மீண்டும் நெய்வேலியில் நடந்த ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அப்போது, விஜய்யைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு கூடினர். இதை அறிந்த விஜய் படப்பிடிப்பு முடிந்ததும் படப்பிடிப்பு தளத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தின் மீது ஏறி கூட்டமாக நின்ற தனது ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.
இந்த செல்பி விஜய்யின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பகிரந்ததும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. ரசிகர்கள் மட்டுமன்றி, பிரபலங்கள் பலரும் இந்த செல்பியை பகிர்ந்தார்கள்.
இந்நிலையில், விஜய்யின் இந்த செல்பி புகைப்படம் ட்விட்டர் தளத்தில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதாவது இந்திய அளவில் அதிகம் பேர் ரீ-ட்விட் செய்த டுவிட் இதுதானாம்.
பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் வெளியிட்ட ட்விட் முதலிடத்தில் இருந்த நிலையில், அதைப் பின்னுக்குத் தள்ளி விஜய் வெளியிட்ட ட்விட் முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.