அனிதாவின் தந்தை மறைவுக்கு பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரும் ஆறுதல் கூறியுள்ளனர்.
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து செய்தியாளர் அனிதா சம்பத் வெளியேறி இருந்தார். வெளியேறி இன்னும் இரண்டு நாட்கள் முடியாத நிலையில், அவரது தந்தை எழுத்தாளர் சம்பத் உடல்நலக் குறைவால் இறந்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ்ஸிற்காக குவாரண்டைனுக்கு செல்வதற்கு முன்பு அனிதா தன் தந்தையுடன் பேசியது எனவும் வெளியே வந்த பிறகு அவரை இன்னும் பார்க்கவில்லை தன் தந்தையின் குரலை கேட்டு 100 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது என வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.
READ MORE- ’என்னாலதான் ஷிவானிக்கு திட்டு!’- #BiggbossPromo2
அவரது தந்தை ஷீரடி சென்றுவிட்டதாகவும் அங்கிருந்து சென்னை ரயிலில் திரும்பி கொண்டிருக்கும் போது ஆந்திரா பக்கம் வரும் போது திடீரென இறந்து இருக்கிறார்.
அவருக்கு ஏற்கனவே அல்சர் உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்ததாகவும் அவருடைய வயது மூப்பின் காரணமாக சமாளிக்க முடியாமல் இரண்டு நாட்கள் சாப்பிடாமல் இருந்திருக்கிறார். இதுதான் அவருடைய இறப்பிற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
அனிதாவின் தந்தை இறப்பு செய்தியை கேட்டு சுரேஷ் சக்ரவர்த்தி, ரமேஷ் என பலரும் அனிதாவிற்கு ஆறுதல் தெரிவித்து தங்களுடைய சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.