ஒரு ஷோவில் கலந்து கொண்டு பாத்திரங்களையும் டாய்லட்டையும் கழுவ வேண்டிய அவசியம் இல்லை தனக்கு இல்லை எனவும் மேலும் தன்னுடைய தேர்வுகளையும் முடிவுகளையும் குறித்து கேள்வி கேட்க உங்களுக்கு உரிமையில்லை எனவும் பிக்பாஸ் சர்ச்சைகளுக்கு நடிகை லக்ஷ்மிமேனன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வரும் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி பிக்பாஸ் ஒளிபரப்பாக இருக்கும் நிலையில் பல யூகங்களின் அடிப்படையில் பிரபல நட்சத்திரங்கள் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாக தினமும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதில் ஆரம்ப நாட்களில் இருந்தே நடிகை லட்சுமிமேனன்லக்ஷ்மிமேனனின் பெயர் வந்து கொண்டு தான் இருக்கிறது. தற்போது இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் லக்ஷ்மிமேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
வேலையில்லாமல் இருப்பவர்களின் பொழுதுபோக்கிற்காக பாத்திரங்களையும் டாய்லட்டையும் கழுவ வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நான் எனது வீட்டில் இந்த வேலைகளை செய்யலாம் ஆனால் ஒரு நிகழ்ச்சிக்காக இந்த வேலைககளை செய்வதும், தனிப்பட்ட வாழ்க்கையை போட்டுக்காட்டுவதும், சண்டை போடுவதும் எனக்கு பிடிக்கவில்லை. நான் பிக்பாஸில் கலந்துகொள்ள போவதாக எழும் வதந்திகள் பொய்யானவை என லக்ஷ்மிமேனன் தெரிவித்துள்ளார்.
பலரும் தான் பிக்பாஸில் கலந்து கொள்ளப்போவதாக வதந்திகள் பரப்பி வருவதாக தெரிவித்த லட்சுமி மேனன், தான் எப்போதும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதில்லை எனவும் ஒரு நிகழ்ச்சிக்காக தனது தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டிய அவசியம் தனக்கில்லை எனவும் தெரிவித்துள்ளார்.