‘நானும் ரெளடி தான்’ படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி, விக்னேஷ் சிவன், நயன்தாரா ஆகியோர் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் மூலம் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். மற்றொரு நாயகியாக சமந்தா நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. மேலும், படத்தின் 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன.
இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கடந்த மாதம் புதுச்சேரியில் படமாக்கப்பட்டது. அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடல் ‘ரெண்டு காதல்’ பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தையொட்டி வெளியான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்னேஷ் சிவன் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவதாக ‘டூ.. டூ.. டூ’ என்ற பாடல் வெளியானது.
இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக்கிற்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இடையில் ஏற்கனவே முட்டல் மோதல் இருந்துள்ளது. இதனால் கடுப்பான விஜய் கார்த்திக் படத்தில் இருந்து விலகிக்கொள்ள, தற்போது எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறாராம்.