திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகள் தற்கொலைக்கு சமம் என்று தமிழக அரசு மற்றும் நடிகர் விஜய் சிம்புவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
சென்னை:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையொட்டி நடிகர் விஜய் நடித்த மாஸ்டர்,சிம்பு நடித்த ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையில் வெளியாகின்றன. எனவே திரையரங்குகளில் 100 சதவீதம் ரசிகர்களுடன் படம் பார்க்க அனுமதிக்க எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து நடிகர் விஜய் கோரிக்கை முன்வைத்தார். சிம்புவும் அறிக்கை மூலம் இக்கோரிக்கையை முன்வைக்க, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இதற்கு சம்மதம் தெரிவித்து அனுமதி வழங்கிவிட்டார். இந்த 100 சதவீத இருக்கை அனுமதி வழங்கியதை தொடர்ந்து பலரும் சமூக ஊடகம் மற்றும் பொது ஊடகங்களில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில், அரவிந்த் சீனிவாசன் என்ற இளம் மருத்துவர் தனது முகநூல் பக்கத்தில் தமிழக அரசு மற்றும் நடிகர் விஜய் சிம்புவிற்கு கோரிக்கை வைத்துள்ளார்.அந்த குறிப்பு பின்வருமாறு:
டியர் விஜய் சார்.. சிலம்பரசன் சார் மற்றும் மாண்புமிகு தமிழக அரசே.. நான் சோர்வடைந்து போய்விட்டேன். நாங்கள் அனைவரும் சோர்வில் உள்ளோம். காவல்துறையினரும் சோர்வடைந்து போய்விட்டனர். துப்புறவு பணியாளர்களும் சோர்வில் உள்ளனர். இதுவரை பார்த்திராத ஒரு பெரிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடக்கூடிய இந்த காலகட்டத்தில், அதிக அளவுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முயற்சிகளை செய்துள்ளோம்.
Read more – சென்னையில் 105 ஆண்டுகளுக்கு பிறகு ஜனவரியில் இப்படி ஒரு மழையா ? கொட்டி தீர்த்த கனமழை
இந்த நேரத்தில் 100% ரசிகர்களை தியேட்டர்களுக்கு அனுமதிப்பது ஒரு தற்கொலை முயற்சி. கொள்கை வகுப்பாளர்களோ, அல்லது நீங்கள் ஹீரோக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களோ, கூட்டத்தோடு கூட்டமாக சென்று திரைப்படம் பார்க்கப் போவது கிடையாது. எனவே உயிரை பணயம் வைத்து பண்டமாற்று முறையில் இங்கு வணிகம் செய்ய வேண்டாம்..இப்படிக்கு ஏழை மருத்துவர் என்று தெரிவித்துள்ளார்.