’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் இருந்து சமந்தா விலகிவிட்டார் என சொல்லப்பட்டுள்ள நிலையில் படக்குழு அதனை தெளிவுப்படுத்தியுள்ளது.
‘மூக்குத்தி அம்மன்’ படத்திற்கு பிறகு நயன்தாரா நடிப்பில் வெளிவர இருக்கும் ‘நெற்றிக்கண்’ மற்றும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதில் ‘நெற்றிக்கண்’ படத்தை தயாரிக்கும் விக்னேஷ் சிவன், ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை இயக்குகிறார். இதில் சமீபத்தில் ‘நெற்றிக்கண்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. கொரோனா லாக்டவுணுக்கு முன்பே, சமந்தா, நயன்தாரா, விஜய்சேதுபதி ஆகியோர் படத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்ப்ட்டு இருந்தது.
ஆனால், தற்போது தன்னுடைய கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என சமந்தா இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாகவும் அவருக்கு பதிலாக கீர்த்தி சுரேஷ் அல்லது த்ரிஷாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாகவும் தகவல் வெளியானது. இதனையடுத்து இந்த தகவல்கள் பொய் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது.
விஜய்சேதுபதியும் படப்பிடிப்பில் இணைந்து விட்டார். இதனை விக்னேஷ் சிவன் ‘வெல்கம்பேக் ஹீரோ’ என தனது சோஷியல் மீடியா பக்கத்தில் தெரிவித்துள்ளார்.